மின்சார, எரிவாயுக் கட்டணங்கள் உயருகின்றன

சிங்கப்பூரில் எரிவாயு மற்றும் மின் கட்டணங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு உயரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கரிம வெளியேற்றத்துக்கான வரி உயர்வு, அதிகரிக்கும் பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் எரிசக்திச் செலவுகள் இந்த கட்டண உயர்வுக்குக் காரணங்களாக சொல்லப்படுகிறது.

அதன்படி, ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை எஸ்பி குழுமம் வீடுகளுக்கு விநியோகிக்கும் மின்சாரக் கட்டணம் ஐந்து விழுக்காடு உயரும்.

அதாவது, ஒரு கிலோவாட் மணி நேரத்துக்கு 32.58 காசுகள் என அதிகரிக்கும். அது தற்போது 31 காசுகளாக உள்ளது.

அதேபோல, எரிவாயுக் கட்டணம் 4 காசு உயரும்.

குழாய் வழி எரிவாயு விநியோகிக்கும் ‘சிட்டி எனர்ஜி’ யின் கட்டணப்படி, ஒரு கிலோவாட்டுக்கு தற்போது 24.21 காசுகளாக இருக்கும் எரிவாயுக் கட்டணம் அடுத்த மூன்று மாதங்களுக்கு 25.23 காசுகள் அதிகரிக்கும்.

மின்சார சில்லறை வர்த்தகர்களுடன் நிலையான கட்டணத் திட்டத்தை மேற்கொண்டு இருக்கும் மின் பயனீட்டாளர்கள், அவர்களின் குத்தகை புதுப்பிக்கப்படும் வரை அவர்களுக்கான மின் கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது.

கட்டண உயர்வுகளை எரிசக்திச் சந்தை ஆணையம் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) அறிவித்தது.

தற்போது 8 விழுக்காடாக இருக்கும் ஜிஎஸ்டி, 2024 ஜனவரி முதல் 9 விழுக்காட்டுக்கு உயருகிறது. அதேபோல, கரிம வெளியேற்றத்திற்கான வரி டன் ஒன்றுக்கு $5 என்றிருப்பது $25ஆக அதிகரிக்க உள்ளது.

கரிம வெளியேற்ற வரி உயர்வதால் நான்கறை வீவக வீடு ஒன்றின் மாதாந்திர பயனீட்டுக் கட்டணத்தில் $4 ஏற்றம் இருக்கும் என்று தேசிய பருவநிலை மாற்றத்துக்கான தலைமைச் செயலகம் இந்த மாதம் முன்னுரைத்து இருந்தது.

வரி உயர்வை முழுமையாக பயனீட்டாளரையே ஏற்கச் செய்யும் சூழலில் அந்த அளவுக்கு ஏற்றம் இருக்கலாம் என கணிப்பின் அடிப்படையில் அது அவ்வாறு கூறி இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!