ஐபிஎல் தொடரிலிருந்து முன்னணி வீரர் விலகல்

முழங்கால் காயம் காரணமாக நடப்பு இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார் நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன்.

இவ்வாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

அதில் சென்னை அணி முதலில் பந்தடித்தது. அப்போது, குஜராத் அணிக்காக எல்லைக் கோட்டருகே நின்றபடி களக்காப்பில் ஈடுபட்ட வில்லியம்சன் சிக்சரைத் தடுக்க முயன்றபோது விழுந்து காயமடைந்தார். அதனால், அவர் போட்டியின் பாதியிலேயே வெளியேற வேண்டியதாயிற்று.

இந்நிலையில், வில்லியம்சனுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தீவிரத்தன்மை குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் இவ்வாண்டு அக்டோபரில் நடக்கவிருக்கும் 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவரால் விளையாட முடியுமா இல்லையா என்பதை இப்போதே சொல்ல முடியாது என்றும் நியூசிலாந்துப் பயிற்றுவிப்பாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார்.

இதனிடையே, வில்லியம்சன் அடுத்த வாரம் தாய்நாடு திரும்புவார் என்றும் அங்கு அவர் மருத்துவ வல்லுநர்களைச் சந்தித்து, சிகிச்சை பெறுவார் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!