இங்கிலாந்து- உக்ரேன் ஆட்டம் சமநிலையில் முடிந்தது

விரோகிலா (போலந்து): யூரோ 2024 காற்பந்துப் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் சனிக்கிழமை இரவு இங்கிலாந்து அணியும் உக்ரேன் அணியும் மோதின.

அந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் உக்ரேனின் ஒலக்சேன்டர் சின்ஜென்கோ கோல் அடித்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இங்கிலாந்தின் கைல் வால்க்கர் 41ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கத் தவறின.

தற்காப்பு ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தியது உக்ரேன். அதனால் இங்கிலாந்து அணியின் முன்னணி ஆட்டக்காரர்கள் கோல்கள் அடிக்கத் தடுமாறினர்.

ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைத்தன.

இரு அணிகளும் பிரிவு ‘சி’யில் உள்ளன.

தற்போது பிரிவு ‘சி’ புள்ளிப்பட்டியலில் 13 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் 7 புள்ளிகளுடன் உக்ரேன் உள்ளது.

இத்தாலி நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது நிலையில் உள்ளது.

புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் யூரோ 2024 காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!