விலை நிர்ணய மோசடி; ஐந்து நிறுவனங்களுக்கு 415 மில்லியன் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர்: கோழிகளுக்கான இரை விலையை நிர்ணயம் செய்வதில் மோசடி செய்ததாக ஐந்து மலேசிய நிறுவனங்களுக்கு 415 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தகவலை மலேசிய போட்டித்தன்மை ஆணையம் வெளியிட்டது.

ஒரு கும்பலாக செயல்பட்டு சந்தையில் ஒரு பொருளின் விலையை நிர்ணயம் செய்தது போட்டித்தன்மை சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்று ஆணையத்தின் தலைவர் இஸ்கந்தார் இஸ்மாயில் தெரிவித்தார்.

டின்டிங்க்ஸ் பொல்ட்ரி டிவெலப்மன்ட் செண்டர் நிறுவனத்துக்கு 70 மில்லியன் ரிங்கிட், எஃப் எஃப் எம் பெர்ஹாத் நிறுவனத்துக்கு 42 மில்லியன் ரிங்கிட், கோல்ட் காய்ன் பீட்மில்ஸ் நிறுவனத்திற்கு 97 மில்லியன், லியோங் ஹப் பீட்மில் மலேசியா நிறுவனத்துக்கு 157 மில்லியன் ரிங்கிட், பிகே ஆக்ரோ இந்தஸ்டிரியல் நிறுவனத்துக்கு 47 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கும்பல் போக்கு போட்டித்தண்மைக்கு பெரும் தீங்கு விளைவிக்கும். அதனால் தான் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போட்டித்தண்மையில் இதுபோன்று தவறுகள் நடந்தால் அது பொருளியலுக்கு அச்சுறுத்தலாக மாறும் என்றும் இஸ்கந்தார் இஸ்மாயில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!