இஸ்ரேல் மீது இனப்பேரழிவு குற்றச்சாட்டு சுமத்தும் தென்னாப்பிரிக்கா

த ஹேக்: அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் காஸாவில் இனப்பேரழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தென்னாப்பிரிக்கா குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை தான் அருவருப்புடன் நிராகரிப்பதாக இஸ்ரேல் பதில் கூறியுள்ளது.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா செய்துள்ள மனுவில் இஸ்ரேல் இனப்பேரழிவுக்கு எதிரான ஒப்பந்தத்தின்கீழ் தனக்குள்ள கடமைகளில் இருந்து தவறிவிட்டதாக கூறுகிறது. இஸ்ரேல், இதுவரை காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்பேரழிவில் ஈடுபட்டுள்ளது, ஈடுபட்டு வருகிறது இனி வருங்காலத்தில் இனப்பேரழிவில் ஈடுபடும் அபாயமும் உள்ளது என்று அது அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

தென்னாப்பிரிக்கா தனது மனுவில், இஸ்ரேல் காஸாவில் பாலஸ்தீனர்கள் ஓர் இனமாக நீடித்திருப்பதை அழிக்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்படுவதாக கூறியுள்ளது.

இதை நிராகரித்த இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லியோர் ஹையாட், இஸ்ரேல் இந்தக் குற்றச்சட்டை அருவருப்புடன் நிராகரிப்பதாக முன்னர் டுவிட்டர் என செயல்பட்ட எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!