ஊழல் எதிர்ப்பு அமைப்பு மீது மகாதீர் மகன்கள் குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதின் இரண்டு மகன்களுக்கு எதிராக அந்நாட்டு ஊழல் எதிர்ப்பு அமைப்பு விசாரணை செய்து வருகிறது.

பல நாள்களாக நடக்கும் இந்த விசாரணை தங்களது 98 வயது தந்தையைக் குறிவைத்து எடுக்கப்படும் நடவடிக்கை என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

1981ஆம் ஆண்டில் சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக தம் தந்தையை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று மகாதீரின் 63 வயது மகன் மொக்சானி தெரிவித்தார்.1981ஆம் ஆண்டில் தான் மகாதீர் மலேசியாவின் பிரதமராக பொறுப்பேற்றார்.

கடந்த ஜனவரி மாதம் ஊழல் எதிர்ப்பு அமைப்பு அதிகாரிகள் தன்னையும் தமது சகோதரர் மிர்சானையும் அணுகியதாக மொக்சானி கூறினார்.

வெளிநாடுகளில் செய்யப்பட்ட வர்த்தகங்கள் குறித்த விசாரணை என்று கூறிய அதிகாரிகள், அது மகாதீருக்குத் தொடர்புடையதா இல்லையா என்பதை தங்களிடம் கூறவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மொக்சானியின் கருத்துக்கு தற்போது பதில் ஏதும் தெரிவிக்க இயலாது என்று ஊழல் எதிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

டாக்டர் மகாதீரின் அலுவலகமும் இதுகுறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

தற்போது நடக்கும் விசாரணை மிகவும் கடினமான ஒன்று என்றும் அது முடிய இன்னும் சில காலம் எடுக்கும் என்றும் மகாதீரின் மகன்கள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!