சேர்ந்து வாழ்ந்த பெண்ணை ‘குக்கரால்’ அடித்துக் கொன்ற 29 வயது ஆடவர் கைது

பெங்களூரு: தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த தேவா என்ற 25 வயதுப் பெண்ணை சமையலுக்குப் பயன்படுத்தும் ‘குக்கரால்’ அடித்துக் கொன்றதாக 29 வயது ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.

தேவா, வைஷ்ணவ் இருவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கல்லூரியில் படிக்கும்போது பழக்கமான இருவரும் ஈராண்டுகளாக பெங்களூரில் ஒரு வாடகை வீட்டில் ஒன்றாக வசித்ததாகவும் கூறப்பட்டது.

தேவா தனக்குத் துரோகம் இழைத்ததாகச் சந்தேகித்த வைஷ்ணவ் அதனால் ஏற்பட்ட பூசலைத் தொடர்ந்து தேவாவைத் தாக்கினார்.

தேவாவுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள இயலாத அவரது சகோதரி, பக்கத்து வீட்டினரைத் தொடர்புகொண்டார்.

அதன் பிறகு அவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவத்திற்குப் பிறகு தப்பியோடிய வைஷ்ணவை காவல்துறையினர் அடையாளம்கண்டு கைது செய்தனர். வைஷ்ணவ் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!