கனடாவில் சீக்கிய இளையர்கள் எண்மர் கைது

புராம்ப்டன்: கனடாவின் ஒன்டாரியோ மாநிலம், புராம்ப்டன் நகரில் தடை செய்யப்பட்ட கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக 19 முதல் 26 வயதுக்குட்பட்ட சீக்கிய இளையர்கள் எண்மர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக பீல் பிராந்திய காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், புராம்ப்டன் நகரின் டோனால்டு ஸ்டீவாா்ட் சாலை பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல்துறை நடத்திய விசாரணையில் 9 செ.மீ. பெரெட்டா கைத்துப்பாக்கியை வைத்திருந்த குற்றத்துக்காக ஜக்தீப் சிங், 22, ஏகம்ஜோத் ரந்தவா, 19, மஞ்சிந்தா் சிங்(26), ஹா்பிரீத் சிங்(23), ரிபன்ஜோத் சிங்(22), ஜப்பான்தீப் சிங்(22), லவ்பிரீத் சிங்(26), ராஜன்பிரீத் சிங்(21) ஆகிய எண்மர் கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்த கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதிர்ஷ்டவசமாக, துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் புராம்ப்டனில் உள்ள ஒன்டாரியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.

கனடாவில் சீக்கியத் தலைவர் ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவின் பங்கிருப்பதாக அந்நாட்டுப் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் பேசியதையடுத்து, இருநாட்டு அரசதந்திர உறவில் மோதல் நிலவும் சூழலில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!