மும்பையில் லாரி - ஆம்புலன்ஸ் மோதல்: 4 பேர் பலி

மும்பை: உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு மருத்துவமனை நோக்கி வேகமாகப் பறந்தது ஒரு மருத்துவ அவசர வாகனம்.

அப்போது அதே திசையில் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று எதிர்பாராத வகையில் வளைந்தபோது மருத்துவ வாகனத்தின் மீது மோதிய இந்த விபத்தில் மருத்துவ வாகனத்தில் சென்ற நோயாளி, மருத்துவர், செவிலியர், ஓட்டுநர் ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தனர்.

அம்போரா பகுதியில் தமன்காவ்- அகமதுநகர் சாலையில் கடந்த திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது. இதில் மருத்துவ வாகனம் நசுங்கிப்போனது.

இந்த விபத்தில் மருத்துவ வாகன ஓட்டுநர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த மருத்துவர் ஆகியோர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் அந்த மருத்துவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இந்த விபத்துச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!