சந்திரபாபு நாயுடு நான்கு வாரங்களுக்கு விடுவிப்பு

விஜயவாடா: ஆந்திராவில் திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, உடல்நிலை காரணங்களுக்காக நான்கு வார காலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவில் 2014 முதல் 2019 வரையிலான முதல்வராக பதவிவகித்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டுக் கழகத்தில் சீமென்ஸ் நிறுவனம் மூலம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க சீமென்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.

இதில் ரூ.118 கோடி ஊழல் நடந்து அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கடந்த 2021ஆம் ஆண்டில் இப்போதைய ஜெகன் மோகன் அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக சிஐடி காவல்துறை 2021ஆம் ஆண்டே வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக சிஐடி காவல்துறையினர் சந்திரபாபு நாயுடுவை கடந்த மாதம் 9ஆம் தேதி கைது செய்து விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தினர்.. இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், சந்திர பாபு நாயுடு தரப்பில் பிணை கோரிய லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து உடல்நிலை மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக அவரை சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்திருந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் நான்கு வார காலம் இடைக்கால விடுவிப்பை அறிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!