ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
அண்மையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியது.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 50 ஒவர் உலகக் கிண்ணப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இப்போது கிடைத்த வெற்றி ஆஸ்திரேலியாவிற்கு பெரும் ஊக்கத்தைக் கொடுக்கலாம்.
அண்மையில் ஆரோன் பின்ச் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார், அவருக்குப் பின் யார் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துவார்கள், ஆஸ்திரேலியா எப்படிச் செயல்படும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது அந்த அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப்பின் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.