இளையர் முரசு

குழந்தைப் பருவத்தில் எண்ணற்ற நிதி, மருத்துவ, கல்வித் தடைகள் இருந்தபோதும் தொடர்ந்து அவற்றை முறியடித்து இன்று சந்தைப்படுத்துதல் மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் இளையர் ஷங்கர்.
ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்பெற்ற ‘லாலீகா’ காற்பந்துப் பள்ளிக்குச் சென்று முழுநேரக் காற்பந்து வீரராகும் தன் கனவை நிறைவேற்ற இருக்கிறார் 14 வயது ஆர்யா மகேஸ்வரன்.
வானளவு விரியும் கனவு, கூர்முனையாகக் குவியும் கவனம். இப்படி, உயர்நிலைப்பள்ளியின்போது தேசிய மாணவர்ப் படையில் சிங்கப்பூர் ஆயுதப் படையைப் பற்றி கற்றுக்கொண்ட ‘லெஃப்டினன்ட்’ யுகராஜ் கார்த்திக், தற்போது 24 வயதில் ஒரு போர்விமானியாகச் செயல்படுகிறார்.
நாட்டு மக்களின் பரிதாப நிலையை அறியாத ஒரு மன்னனுக்கு சிறு வயதிலேயே இறக்கும் விதி. மரணத்திற்குப் பிறகு தன்னுடன் சேர்ந்து சொர்க்கத்திற்கு செல்வதற்குத் துணை தேவை என்ற காரணத்தினால் மாறுவேடத்தில் தனது ஊருக்குச் சென்று மக்களின் ஏழ்மை நிலையைக் கண்டறியும் மன்னரின் கதை தான் இவ்வாண்டின் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ் பேரவை நடத்திய ‘சங்கே முழங்கு’ மேடை நாடகம். 
இசை எப்பொழுதும் தங்கள் மகனின் வாழ்வில் ஓர் அங்கமாக இருக்க வேண்டுமென்று பவித்திரனின் பெற்றோர் விரும்பினர். பவித்திரனின் கலையார்வத்திற்கு வித்திட்ட அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் இசைக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடனக் கலைஞர்கள், நடிகர்கள் என பல வகைகளில் கலையோடு தொடர்பில் உள்ளனர்.