பிளிங்கன்: காஸாவில் அன்றாட உயிரிழப்புகள் மிக அதிகம்

டெல் அவிவ்: இஸ்‌ரேலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா சுமத்தியுள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டு, ‘தகுதியற்றது’ என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஜனவரி 9ஆம் தேதியன்று தெரிவித்தார்.

இருப்பினும், போரினால் தினமும் உயிரிழக்கும் காஸா மக்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருப்பதாக அவர் சுட்டினார்.

இஸ்‌ரேலியத் தலைவர்களை டெல் அவிவில் சந்தித்துப் பேசிய திரு பிளிங்கன், அதையடுத்து நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டார்.

நிலவரம் மேம்படும்போது பாலஸ்தீனர்கள் முடிந்தவரை விரைந்து தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறிய திரு பிளிங்கன், ஐக்கிய நாடுகள் காஸாவில் மதிப்பீடு நடத்தும் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றையும் சுட்டினார்.

காஸாவுக்கு வெளியே உள்ள பாலஸ்தீனர்களை வேறு இடத்தில் குடியேறச் செய்யும் திட்டத்துக்குக் குரல்கொடுக்கும் திட்டங்களை அமெரிக்கா இதுவரை நிராகரித்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.

தன்னையே சீர்படுத்திக்கொள்ளும் பொறுப்பு பாலஸ்தீன அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் திரு பிளிங்கன் வலியுறுத்தினார்.

மத்தியக் கிழக்கிலுள்ள பல நாடுகளுக்கு இவ்வாரம் திரு பிளிங்கன் சென்றுவருகிறார்.

காஸாவின் எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்காக மத்தியக் கிழக்கு நாடுகள் பல தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் ஒரு பாலஸ்தீன மாநிலத்துக்கு இட்டுச்செல்லும் தெளிவான பாதை ஒன்று அமைக்கப்பட்டால் மட்டுமே இந்நிலை ஏற்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!