மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த பேருந்து; 17 பேர் உயிரிழப்பு

மணிலா: பிலிப்பீன்சில் மலைமீது சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, வாகனத்தை நிறுத்த உதவும் கருவி செயலிழந்ததால், குறுகிய பள்ளத்தாக்கில் விழுந்தது.

இச்சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.

ஏழுப் பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சீரான உடல்நிலையுடன் மேலும் நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறப்பட்டது.

முன்னதாக உள்ளூர் ஊடகங்கள் 28 பேர் மாண்டதாகத் தகவல் வெளியிட்டிருந்தன.

அந்தப் பேருந்து, டிசம்பர் 5ஆம் தேதி பிற்பகலில், இலோய்லோ வட்டாரத்திலிருந்து குலாசி நகருக்குச் சென்றுகொண்டிருந்தது. ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த இயலாததால் 30 மீட்டர் ஆழத்தில் உள்ள குறுகலான பள்ளத்தாக்கில் அந்தப் பேருந்து விழுந்தது.

அதில் 53 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கண்ணுக்குத் தெரிந்த சடலங்கள் அனைத்தும் மீட்கப்பட்டதாகவும் மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!