காஸாவுக்கு மனிதாபிமான உதவி: ஐநா வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

காஸா: காஸாவுக்குக் கூடுதல் மனிதாபிமான உதவி வழங்குவது குறித்து ஐக்கிய நாட்டுச் சபை பாதுகாப்பு மன்றத்தில் நடைபெறவிருந்த வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 22ஆம் தேதிவரை (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதோடு, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே தொடரும் போரைத் தற்காலிகமாக நிறுத்த இரு தரப்பையும் ஒப்புக்கொள்ளவைக்க எகிப்தில் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. பிணைக் கைதிகளை விடுவிப்பதற்காக போரைத் தற்காலிகமாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பயன்படுத்தக்கூடிய எல்லா பாதைகளின் வழியாகவும் மனிதாபிமான உதவியை அனுப்புவதற்கு வகைசெய்ய இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் குரல் கொடுக்க மாற்றங்கள் செய்யப்பட்ட பரிந்துரை முன்வைக்கப்பட்டது. அதற்கு ஆதரவளிக்கத் தயாராய் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தபோதும் வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது.

நிலைமைக்குத் தீர்வுகாண அரசதந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், காஸா பகுதியில் போர் தீவிரமடைந்துள்ளது.

காஸாவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன; அதேவேளை, இஸ்ரேலின் வர்த்தகத் தலைநகரான டெல் அவிவ்மீது ஹமாஸ் அமைப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சி வருவதாகவும் வியாழக்கிழமையன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!