நாய் இறைச்சி வர்த்தகத்தைத் தடைசெய்யும் மசோதாவை தென்கொரிய நாடாளுமன்றம் நிறைவேற்றியது

சோல்:தென்கொரிய நாடாளுமன்றம் ஜனவரி 9ஆம் தேதியன்று நாய் இறைச்சி சாப்பிடுவதையும் விற்பதையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மசோதாவை நிறைவேற்றியது.

விலங்கு நலன் தொடர்பில் தென்கொரியாவில் வலுக்கும் ஆதரவுக்கு மத்தியில் பலநூற்றாண்டு வழக்கத்தைச் சட்டவிரோதமாக்கும் படியாக இது அமைந்துள்ளது.

ஒருகாலத்தில் ஈரப்பதம் மிக்க கோடைக்காலத்தின்போது நாய் இறைச்சியை உண்பது உடலுக்குப் பலத்தைக் கொடுக்கும் என்று கருதப்பட்டது.

ஆனால், இந்த வழக்கு அரிதாகிவிட்டது. தற்போது, பெரும்பாலும் வயதானவர்களே நாய் இறைச்சியை உண்கிறார்கள். நாய்களை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப் பெரும்பாலான கொரியர்கள் விரும்புகின்றனர்.

நாய்களை அவற்றின் இறைச்சிக்காக கொல்லும்போது அவற்றின் உடலில் மின்சாரம் பாய்ச்சப்படுகிறது அல்லது அவை தூக்கிலிடப்படுகின்றன என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், இறைச்சிக்காகக் கொல்லும் முறைகளை மேலும் கருணையுடையதாக்குவதில் முன்னேற்றம் உள்ளதாக இந்த வர்த்தகத்தில் உள்ளோர் கூறுகின்றனர்.

இச்சட்டம்  மூன்றாண்டு கால அவகாசத்திற்குப் பிறகு அமலுக்கு வரும். சட்டத்தை மீறினால் மூன்று ஆண்டு வரை சிறைத்தண்டனை அல்லது 30 மில்லியன் வான் (S$30,300) அபராதம் விதிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!