காரால் மோதி ஏடிஎம் இயந்திரத்தைத் தகர்த்த கொள்ளையர்கள்

மும்பை: காரால் மோதி, ஏடிஎம் இயந்திரத்தைத் தகர்த்து, பணத்தைக் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

எலம்பகட்டா பகுதியில் உள்ள மகாராஷ்டிர வங்கிக் கிளையில் இம்மாதம் 6ஆம் தேதி விடிகாலை 3 மணியளவில் இக்கொள்ளை முயற்சி இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

கொள்ளையர்களின் முயற்சி குறித்த காணொளி கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.

முகமூடி அணிந்த கொள்ளையர் இருவர் தங்களது காரால் மோதி ஏடிஎம் இயந்திரத்தைத் தகர்த்தனர். ஆயினும், அவர்களின் கொள்ளை முயற்சி ஈடேறவில்லை.

நிகழ்விடத்திற்குக் காவல்துறை வந்ததை அடுத்து, அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர்.

கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிந்து, கொள்ளையர்களைத் தேடும் பணியில் இறங்கியுள்ளது.

‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்திலும் இதுபோன்றதொரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதனைக் கண்டபின் கொள்ளையர்கள் இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!