இரண்டாவது தங்கம் வென்று முத்திரை பதித்த சாந்தி பெரேரா

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் நடந்துவரும் ஆசியத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

முன்னதாக, 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கத்தை இவர் அறுவடை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வெல்ல வாய்ப்புள்ளோரில் ஒருவராக ஞாயிற்றுக்கிழமை நடந்த 200 மீட்டர் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த சாந்தி 22.70 நொடிகளில் பந்தயத் தொலைவைக் கடந்து சாதித்தார்.

இந்தியாவின் ஜோதி யாராஜி 23.13 நொடிகளில் இரண்டாமிடத்தையும் சீனாவின் லி யுட்டிங் 23.25 நொடிகளில் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

இவ்வாண்டு கம்போடியாவில் நடந்த தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 26 வயதான சாந்தி 100 மீ., 200 மீ., என இரண்டு போட்டிகளிலும் தங்கத்தைக் கைப்பற்றியிருந்தது நினைவுகூரத்தக்கது.

புதிய தேசிய சாதனையுடன் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் சாந்தி வாகை சூடினார். இதன்மூலம், 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியத் திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் சிங்கப்பூருக்குப் பதக்கம் கிடைத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!