ரொனால்டோ: இனி ஐரோப்பாவில் ஆடமாட்டேன்

ரியாத்: இனி தான் ஐரோப்பாவில் விளையாடப் போவதில்லை என்று காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவித்துள்ளார். மேலும், சவூதி அரேபிய காற்பந்து லீக், எம்எல்எஸ் எனப்படும் அமெரிக்க காற்பந்து லீக்கைவிடச் சிறந்தது என்றும் அவர் கூறினார்.

தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் குழுவில் விளையாடுகிறார் போர்ச்சுகல் வீரரான ரொனால்டோ. அர்ஜென்டினிய நட்சத்திரமான லயனல் மெஸ்ஸி, எம்எல்எஸ் குழுவான இன்டர் மயாமியில் சேர்ந்துள்ளார்.

பெரும்பாலான ஐரோப்பிய லீக்குகள் களையிழந்து வருவதாகச் சொன்னார் 38 வயது ரொனால்டோ.

“எந்த ஐரோப்பிய குழுவிலும் நான் சேரமாட்டேன் என்பதை 100 விழுக்காடு உறுதியாகச் சொல்கிறேன். எனக்கு 38 வயதாகிவிட்டது,” என்று ரொனால்டோ கூறியதாக இஎஸ்பிஎன் ஊடகம் தெரிவித்தது.

“ஐரோப்பியக் காற்பந்தின் ஆற்றல் குறைந்துவிட்டது. ஒரு லீக் மட்டும்தான் இன்னமும் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறது. அது இங்கிலிஷ் பிரிமியர் லீக்தான். மற்ற லீக்குகளைவிட அது மிகச் சிறப்பாக உள்ளது,” என்றும் குறிப்பிட்டார் ரொனால்டோ.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரொனால்டோ அல் நாசரில் சேர்ந்தார். அக்குழுவில் இரண்டரை ஆண்டுகளுக்கு விளையாட வகைசெய்யும் 200 மில்லியன் யூரோ (297.3 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!