ஆக்லாந்து: கட்டை விரலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் செளத்தி, இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.
அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று உலகக் கிண்ணப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தைச் சந்திக்கிறது நியூசிலாந்து. அதில் செளத்தியை விளையாட வைப்பது தங்கள் இலக்கு என்று நியூசிலாந்து அணி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியன்று 34 வயது செளத்தி காயமுற்றார். இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் பந்தைப் பிடிக்க முயன்றபோது அவர் காயமுற்றார்.
சென்ற வாரம் வியாழக்கிழமையன்று அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். ஒருவேளை செளத்தியால் விளையாட முடியாவிட்டால் மாற்று ஆட்டக்காரராக கைல் ஜேமிசன் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.