பீகார்: இரண்டு மில்லியன் மாணவர்களின் சேர்க்கைப்பதிவு ரத்து

பெற்றோர் உறுதிமொழி வழங்கினால் மட்டுமே பொதுத் தேர்வு எழுத முடியும்

பாட்னா: இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள அரசுப் பள்ளிகளிலிருந்து 2,087,063 மாணவர்களின் சேர்க்கைப்பதிவு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கல்வி அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அம்மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

உரிய அதிகாரிகளிடம் முன்அனுமதி பெறாமல் தொடர்ந்து 15 நாள்களாகப் பள்ளிக்கு வராமல் இருந்ததையடுத்து, பீகார் மாநிலக் கல்வி அமைச்சு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சேர்க்கைப்பதிவு நீக்கப்பட்டோரில் 266,564 பேர், 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள்.

தங்கள் பிள்ளைகள் இனியும் அத்தவற்றைச் செய்யமாட்டார்கள் என அம்மாணவர்களின் பெற்றோர்கள் உறுதிமொழிக் கடிதம் அளித்தால் மட்டுமே அவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக்கு வராமலிருக்கும் மாணவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கே.பதக் உத்தரவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!