'என் படத்தை ஓடவிடாமல் தடுத்துவிட்டனர்'

1 mins read
7653c4a3-6a41-4f9f-a2fb-9fc6fcc963a4
'தடை உடை' படத்தில் மணிகண்ட பிரபு, செந்தில், பாபி.'டூடி' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் கார்த்திக், ஷ்ரிதா சிவதாஸ். -

தாம் தயா­ரித்த படத்தை வேண்டு­மென்றே முடக்­கி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார் கார்த்­திக் மது சூதன். இவர் தயா­ரித்த படம் 'டூடி'.

அண்­மை­யில் இப்­ப­டத்தை வெளி­யிட்­டார் கார்த்­திக். தமிழகம் முழு­வ­தும் ஐம்­பது திரை­ அ­ரங்­கு­களில் வெளி­யிட ஏற்­பாடு­கள் நடை­பெற்­றன. ஆனால் படம் வெளி­யான பிறகு சில திரை­ய­ரங்­கு­களில் காட்­சி­களை திடீ­ரென ரத்து செய்­து­விட்­டன ராம்.

"இதன் மூலம் என் படத்தை ஓட­வி­டா­மல் செய்­து­விட்­ட­னர். இத­னால் ஒட்­டு­மொத்­தப் படக்­கு­ழு­வும் சோகத்­தில் உள்­ளது.

"இது­கு­றித்து நான் யாரி­டம் போய் முறை­யி­டு­வது. அனை­வரும் அழுது கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளின் வேத­னைகளை யார் தீர்ப்­பது?

"ஒரே நாளில் என் படம் முடிந்­து­விட்­டது. வாழ்க்கை இருண்டு போய்­விட்­டது," என்கிறார் கார்த்­திக்.