கதை/கவிதை

அந்த ஜனவரி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அடித்த ‘அலார’ சத்தம் உறங்கிக் கொண்டிருந்த சங்கரின் காதில் நுழைந்து மூளைக்குள் அதிர்ந்தது. எரிச்சலோடு விழித்த அதே வேகத்தில் ஆமைபோல் தலையைப் போர்வையிலிருந்து நீட்டினான். ‘ஐந்து நிமிடம் கழித்து அழைக்கவும்’ என்று ஆங்கிலத்தில் கூகலிடம் சொல்லிவிட்டு, மீண்டும் பூனைபோல் சுருண்டு போர்வைக்குள் நுழைந்தான். மறுபேச்சின்றி கூகல் அலாரத்தை உறக்கநிலைக்கு உயர்த்தியது. சில நிமிடங்களில் “என்னங்க, ‘வாக்கிங்’ போக வேண்டாமா? எழுந்திருங்க!” அவன் மனைவி கமலாவின் குரல் கேட்டது. இதுவரை மனைவியின் பேச்சை நிறுத்த எந்தக் கருவியும் கண்டுபிடிக்கப்படாததால், வேறு வழியின்றி எழுந்தான் சங்கர்.
“பார்த்து போங்க!” மனைவியின் அன்பான வேண்டுகோளை நினைத்தபடியே சாலையைக் கடந்தேன். இப்படித்தான் சில நாள்களுக்குமுன் சிராங்கூன் சாலையில் இருக்கும் கடையில் வீட்டுக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடையைப் போட்டேன்.
கடலை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஆயிஷா. அவளது மனப்புழுக்கத்தைப் போலவே கடற்கரையும் ஒரே வெக்கையாக இருந்தது. மனிதர்களுக்கு பல அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை என்னும் ஆசான், அண்மைக் காலமாக அவளுக்குத் தனிமைப் பாடத்தை நன்றாக உணர்த்தி வருகிறது. போதாததற்கு முதுமை வேறு அவளைப் பார்த்து புன்னகையை உதிர்த்து ‘ஹலோ’ என்றது. இத்தனை ஆண்டுகளாக என்னைத் தவிக்கவிட்ட என் ராஜகுமாரன் இன்றைக்காவது வந்து என்னைத் தழுவிக்கொள்வானா? என அவளின் மனம் கடலில் எழும் அலைகளைப் போலவே ஆர்ப்பரித்தது.
மெதுவாக நடந்து