சமூகம்

தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபுடைமை மானியத் திட்டத்தின்கீழ் நிதி கேட்கும் கலைப்படைப்புகளின் பன்முகத்தன்மை காலப்போக்கில் அதிகரித்துள்ளதாக அந்தக் கழகம் தெரிவித்துள்ளது.
இப்போது 17 வயதாகும் ரோஹனுக்கு (உண்மைப் பெயரன்று) பள்ளிப் பருவத்தில் தீய சேர்க்கை இன்பம் தந்தது. கல்வியில் நாட்டமின்மை, மது அருந்துவது, புகைபிடிப்பது, அடிதடி, வெட்டு, குத்து என்பவை எல்லாம் அவரது வாழ்க்கையில் வழக்கமாகின.
மாற்றுத்திறனாளிகளுக்கும் மூப்படையும் சமூகத்திற்கும் ஆதரவுக்கரமாக விளங்க மருத்துவத் துறைக்குச் சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்கள் அதிகம் தேவைப்படுவதாகச் சில தனியார் மருத்துவமனைகள் அண்மையில் தெரிவித்தன.
தகவல் தொழில்நுட்பத் துறையில் 17 ஆண்டுகளாக பணியாற்றிவரும் ராணி ஸ்ரீகந்தாச்சாரி, 13வது ‘ஹோட் மோண்ட்’ திருமதி இந்தியா 2024 அனைத்துலக அழகுராணி போட்டியில் பங்குபெறுகிறார்.
மெதுவோட்டப் பழக்கத்தை 50 வயதுக்குப் பிறகு மேற்கொண்ட அஞ்சலி இயோ, 60, இப்போது நெட்டோட்டத்திலும் மலையேற்றத்திலும் பங்கெடுத்து வருகிறார்.