தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படுக்கையறையில் மறைத்துவைக்கப்பட்ட கேமரா: கணவர் மீது மனைவி புகார்

1 mins read
42424eb0-1461-4b74-b598-316435f55309
தம்முடன் நெருக்​க​மாக இருக்​கும் காணொளிகளை வெளி​நாடு​களில் உள்ள நண்​பர்​களு​டன் தமது கணவர் பகிர்ந்​துகொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். - படம்: பிக்சாபே

பெங்களூரு: பெங்​களூரு​வில் படுக்கைறை​யில் தமது கணவர் கேமரா ஒன்றை மறைத்துவைத்ததாக பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தமது கணவருடன் நெருக்கமாக இருந்த, அந்தரங்கக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டதாக பெங்களூருவைச் சேர்ந்த அந்த 27 வயது பெண் தெரிவித்தார்.

35 வயது சையத் இனாமுல் என்பவரைத் தாம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரம்பிடித்ததாக அப்பெண் தமது புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். வரதட்​சணை​யாக 340 கிராம் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவை தமது கணவருக்குக் கொடுக்கப்பட்டதாக அப்பெண் கூறினார்

இதையடுத்து, தமது கணவர் ஏற்கெனவே திருமணமானவர் என்று தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்​டபோது, அவர் தம்மைத் தாக்கியதாக அப்பெண் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது, அவருக்கு 19 பெண்​களு​டன் தொடர்பு இருப்​பது தெரிய​வந்ததாகவும் அவர் கூறினார்.

தம்முடன் நெருக்​க​மாக இருக்​கும் காணொளிகளை வெளி​நாடு​களில் உள்ள நண்​பர்​களு​டன் தமது கணவர் பகிர்ந்​துகொண்டதாகவும் வெளி​நாடு​களில் இருந்து அவர்​கள் பெங்​களூரு வரும்​போது தம்மை அவர்​களு​டன் பாலியல் உறவு கொள்ளுமாறும் அவர் வலி​யுறுத்​தி​யதாகவும் அப்பெண் புகார் செய்தார்.

கணவர் கூறியதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது பெற்​றோரும் தம்மைக் கடுமை​யாகத் தாக்கி துன்​புறுத்தியதாக அப்பெண் தெரிவித்தார்.

இதுகுறித்து சையத் இனா​முல், அவரது பெற்​றோர் உட்ப‌ட நால்வர் மீது காவல்துறையினர் வழக்​குப்​ப​திவு செய்து தலைமறை​வான சையத்தைத் தேடி வரு​கின்​றனர்​.

குறிப்புச் சொற்கள்