தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

50 ஆண்டுகளில் வெப்பக் காற்றுக்கு 17,000 பேர் பலி

1 mins read
79c3da21-76a8-41bb-ab9d-be27f9dfc535
வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை அதிகரித்து உள்ளது. ராஜஸ்தானில் உள்ள கங்கா நகரில் வெயிலுக்கு இதமாக மாட்டைக் குளிப்பாட்டுகிறார் இந்தச் சிறுமி. படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: அனல் காற்­றின் கடுமை தாங்­கா­மல் இந்­தி­யா­வில் கடந்த ஐம்­பது ஆண்­டு­களில் மட்­டும் சுமார் 17 ஆயி­ரம் பேர் மாண்­டுள்­ள­னர்.

1971 முதல் 2019ஆம் ஆண்டு வரை­யி­லான கால­கட்­டத்­தில் அனல் காற்­றால் ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­கள் குறித்து மத்­திய புவி அறி­வி­யல் அமைச்­சக செய­லா­ளர் எம்.ராஜீ­வன் ஆய்­வ­றிக்கை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். இதில் பல வானிலை நிபு­ணர்­க­ளின் கருத்­து­கள் இடம்­பெற்­றுள்­ளன.

அதில், இந்­தி­யா­வில் கடந்த 1971 முதல் 2019ஆம் ஆண்டு வரை கடும் வானிலை நிகழ்­வு­க­ளால் 141,308 பேர் பலி­யா­கி­விட்­ட­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அவர்­களில் அனல் காற்­றுக்குப் பலி­யா­னோர் எண்­ணிக்கை மட்­டும் 17,362 என்­றும் ஆந்­திரா, தெலுங்­கானா, ஒடிசா ஆகிய மாநி­லங்­க­ளில்­தான் அனல் காற்று அதி­க­மா­னோரை காவு வாங்­கி­யுள்­ளது என்­றும் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சம­வெளி பகு­தி­களில் 104 டிகிரி பாரன்­ஹீட்­டுக்கு மேல் வெப்­ப­நிலை பதி­வா­கும் நிகழ்­வு­கள், அனல் காற்­றாக வகைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

அதிக வெப்­ப­நி­லை­யால் ஏற்­படக் கூடிய உடல் பாதிப்­பு­கள் குறித்­தும் அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நடப்பாண்டிலும் நாடு முழுவதும் தற்போது அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது.