ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினோத் குமார் சர்மா, ஷகாபாத் என்னும் நகரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் அடங்கிய கைப்பையுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய குரங்கு ஒன்று அவரிடமிருந்து பையைப் பறித்துச் சென்று அருகிலிருந்து மரத்தின் மீது வேகமாக ஏறி உட்கார்ந்து கொண்டது. பதறிப்போன வினோத் குமார், பணத்தைத் தந்துவிடுமாறு குரங்கை நோக்கிக் கெஞ்சத் தொடங்கினார்.
இருப்பினும் 50,000 பணக்கட்டுகள் இரண்டை கையில் எடுத்துக்கொண்டு மீதிப் பணம் 1 லட்சம் ரூபாயுடன் பையை கீழே போட்டது. அதற்குள் அங்கு கூட்டம் கூடிவிட்டது. கையிலிருக்கும் பணத்தையும் கீழே போட குரங்கை உற்சாகப்படுத்தும் வகையில் அத்தனை பேரும் சேர்ந்து கைதட்டினர். அதனைக் கண்ட குரங்கு, இரு பணக்கட்டுகளையும் பிரித்து ரொக்க நோட்டுகளை மரத்திலிருந்து வீசத் தொடங்கியது.
கூட்டத்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் பணத்தை ஓடி ஓடி எடுத்தனர். சிலர் வினோத் குமாரிடம் கொடுத்தனர். வேறு சிலர் தங்களது பையில் வைத்துக் கொண்டு நழுவினர். "அது என் பணம், கொடுத்துவிடுங்கள்," என்று அவர் இப்போது மக்களைப் பார்த்துக் கெஞ்சத் தொடங்கினார். இறுதியில் ரூ.5,000 குறைந்தது. கிைடத்த வரை லாபம் என்று அவர் நிம்மதியடைந்ததாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' தெரிவித்துள்ளது.