தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொலை மிரட்டல்: மலையாள நடிகர் திலீப் மனு தள்ளுபடி

2 mins read
9b20bf0b-6e92-48d7-8702-8019f8e31658
-

திரு­வ­னந்தபுரம்: தனக்கு எதி­ரான பாலி­யல் வன்­கொ­டுமை வழக்கை விசா­ரித்த காவல்­துறை அதி­கா­ரி­களை கொலை செய்ய திட்­டம் தீட்­டி­ய­தாக மலை­யாள நடி­கர் திலீப் மீது கேரள காவல்­துறை வழக்­குப் பதிவு செய்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்­டும் என திலீப் தரப்பு தாக்­கல் செய்த மனுவை கேரள உயர் நீதி­மன்­றம் நேற்று தள்­ளு­படி செய்­தது.

கேர­ளா­வில் முன்­னணி நடிகை ஒரு­வர், கடந்த 2017ஆம் ஆண்டு தனது காரில் சென்று கொண்­டி­ருந்­த­போது, மர்ம கும்­ப­லால் கடத்­தப்­பட்டு பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக புகார் எழுந்­தது. மேலும், அதை காணொ­ளி­யில் பதிவு செய்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

இது தொடர்­பான விசா­ர­ணை­யின் முடி­வில் மலை­யாள முன்­னணி நடி­கர்­களில் ஒரு­வ­ரான திலீப்­தான் அந்த நடி­கை­யைக் கடத்­தி­ய­தா­கத் தெரிய வந்­தது. இதை­ய­டுத்து, அவர் கைது செய்­யப்­பட்­டார்.

80 நாள் சிறை­வா­சத்­துக்­குப் பிறகு பிணை­யில் விடு­விக்­கப்­பட்ட நிலை­யில், கேரள காவல்­து­றை­யி­னர் தீவிர விசா­ரணை மேற்­கொண்டு அவர் மீது நீதி­மன்­றத்­தில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­தனர்.

மேலும், வழக்­குக்­குத் தேவை­யான பல்­வேறு ஆவ­ணங்­களும் தாக்­கல் செய்­யப்­பட்­டன.

இந்­நி­லை­யில், இவ்­வ­ழக்கை விசா­ரித்த காவல்­துறை அதி­கா­ரி­களை திலீப் மிரட்­டி­ய­தா­க­வும் அவர்­க­ளைக் கொலை செய்­யத் திட்­ட­மிட்­ட­தா­க­வும் ஒரு தக­வல் வெளி­யா­னது.

மலை­யாள திரைப்­பட இயக்­கு­நர் பால­சந்­தர் தொலைக்­காட்­சிப் பேட்­டி­யில் இந்­தத் தக­வல் உண்மை என்று கூறி­யதை அடுத்து, கேரள காவல்­து­றை­யின் இணைய குற்­றப்­பி­ரிவு அதி­கா­ரி­கள் திலீப் மீது மற்­றொரு வழக்­கைப் பதிவு செய்­த­னர்.

இது தொடர்­பாக அவ­ரது சகோ­த­ரர் உள்­ளிட்ட ஆறு பேர் கைதா­கி­னர். இந்த வழக்கு பொய்­யா­னது என்­றும் இதை ரத்து செய்­ய­வில்லை எனில் சிபிஐ விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட வேண்­டும் என்­றும் திலீப் தரப்பு நீதி­மன்­றத்­தில் மனுத்­தாக்­கல் செய்­தது.

இந்த மனு மீதான விசா­ரணை நேற்று கேரள உயர் நீதி­மன்­றத்­தில் நடந்­த­போது, இரு­த­ரப்பு வாதங்­க­ளை­யும் கேட்ட நீதி­ப­தி­கள், திலீப் மீதான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உரிய ஆதா­ரங்­கள் இருந்ததாகக் கூறினர்.

காவல்­துறை தொடர்ந்து வழக்கை நடத்­த­லாம் என்று உத்­த­ர­விட்­ட­னர்.

கொலை முயற்சி வழக்­கில் திலீப்­பின் மனை­வி­யும் நடி­கை­யு­மான காவ்யா மாத­வ­னுக்­குத் தொடர்பு இருப்­ப­தா­க­வும் புகார் எழுந்­துள்­ளது. இதனால் மலையாளத் திரையுலகில் பரபரப்பு நிலவுகிறது.