'அயன்' படத்தைப்போல ஹெராயின் கடத்தல்

2 mins read
56bb5239-682a-4bdb-a308-fd08f58700d4
-

குஜ­ராத்: சூர்யா நடித்த 'அயன்' படத்­தில் ஹெரா­யினை பிள்­ளை­யார் சிலை­யில் ஊற­வைத்து கடத்­தல் செய்­வ­து­போன்ற காட்சி இடம்­பெற்­றி­ருந்­தது. அது­போல நூலை

ஹெரா­யின் கரை­ச­லில் கரைத்து உலர வைத்து கடத்த முயன்ற

முயற்­சியை குஜ­ராத் தீவி­ர­வாத தடுப்­புப் படை­ வெற்­றி­க­ர­மாக தடுத்து நிறுத்தி இருக்­கிறது.

ஈரா­னில் இருந்து பிபா­வாவ் துறை­மு­கத்­திற்கு ஐந்து மாதங்­

க­ளுக்கு முன்பு வந்த கப்­பலில் இருந்த கொள்­க­லன்­களில் சந்­தே­கத்­திற்கு இட­மான நான்கு பைகளில் சுமார் 395 கிலோ எடை­யுள்ள நூல்­கள் இருந்­ததை தட­ய­வி­யல் நிபு­ணர்­கள் ஆய்வு செய்­த­னர்.

இதில் ஹெரா­யின் என்­கிற போதைப் பொருள் இருந்­தது தெரி­ய­வந்­தது.

அந்த நூல்­களில் இருந்து ரூ.450 கோடி மதிப்­புள்ள கிட்­டத்­தட்ட 90 கிலோ ஹெரா­யின் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இந்த கடத்­தல் சம்­ப­வத்தை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டிக்­கா­மல் இருப்­ப­தற்­காக, ஹெரா­யின் உள்ள கரை­ச­லில் நூல்­களை ஊற­வைத்து, பின்­னர் உலர்த்­தப்­பட்டு நூல் கண்டு­

க­ளாக உரு­வாக்கி சாதா­ரண நூல் கட்­டு­க­ளைக்­கொண்ட மற்ற நூல் கண்டுகளுடன் கலந்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இது­தொ­டர்­பாக போதைப் பொருள் தடுப்­புச் சட்­டம் 1985ன் விதி­க­ளின் கீழ் 'டிஆர்ஐ' மூலம் ஆய்வு மற்­றும் பறி­மு­தல் நட­வ­டிக்­கை­கள் நடந்து வரு­வ­தாக குஜ­ராத் காவல்­துறை இயக்­கு­நர் ஜென­ரல் ஆஷிஷ் பாட்­டியா தெரி­வித்­துள்­ளார்.

குஜ­ராத் தீவி­ர­வாத தடுப்­புப் படை மற்­றும் வரு­வாய் புல­னாய்வு இயக்­கு­ந­ர­கம் இணைந்து நடத்­திய இந்தக் கூட்டு நட­வ­டிக்­கை­யில் மிகப்­பெ­ரிய போதைப்­பொ­ருள் கடத்­தல் முறி­ய­டிக்­கப்­பட்­டதை பிரதமர் மோடியும் அரசியல் அதிகாரிகளும் பாராட்டினர்.