'நேஷனல் ஹெரால்ட்' அலுவலக சோதனை பழிவாங்கும் செயல்: காங்கிரஸ் கட்சி குமுறல்

1 mins read
4e4648b5-d0e0-496e-a898-e7674f02e9e6
-

புது­டெல்லி: காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்­தி­யும் அவ­ரது மகன் ராகுல் காந்­தி­யும் இயக்­கு­நா்­க­ளாக உள்ள 'யங் இந்­தியா' நிறு­வ­னம், 'நேஷ­னல் ஹெரால்ட்' பத்­தி­ரி­கையை வெளி­யி­டும் அசோ­சி­யேட்­டட் ஜா்னல்ஸ் நிறு­வ­னத்தை கடந்த 2010ஆம் ஆண்டு கைய­கப்­ப­டுத்­தி­யது.

இதில் மிகப்­பெ­ரிய அள­வில் பண மோசடி நடை­பெற்­ற­தா­கக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்­பி­ர­ம­ணி­யன் சுவாமி வழக்­குத் தொடா்ந்தாா். இந்த மோசடி தொடா்பாக அம­லாக்­கத் துறை தனி­யாக வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இந்த வழக்­கில் காங்­கி­ரஸ் தலை­வர்­கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்­லி­காா்ஜுன காா்கே, பவன் குமாா் பன்­சால் ஆகி­யோ­ரி­டம் அம­லாக்­கத்­துறை விசா­ரணை நடத்­தி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், டெல்­லி­யில் உள்ள 'நேஷ­னல் ஹெரால்ட்'' அலு­வ­ல­கத்­தில் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் நேற்று சோதனை நடத்­தி­னர். இந்­தச் சோத­னையை கடு­மை­யாக கண்­டித்­துள்ள காங்­கி­ரஸ், இது அர­சி­யல் பழி­வாங்­கும் நட­வ­டிக்கை என சாடி­யுள்­ளது. மேலும், நாட்­டின் பிர­தான எதிர்க்­கட்சி மீதான தொடர்ச்­சி­யான தாக்­கு­த­லின் ஒரு பகு­தியே இந்த நட­வ­டிக்கை என­வும் காங்­கி­ரஸ் குற்­றம் சாட்­டி­யுள்­ளது.