தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவமனையில் கட்டணமின்றி பிறந்த 2,400 பெண் குழந்தைகள்

2 mins read
ce44bbab-be77-4998-9376-7191e49316ab
(மேல்) மருத்­து­வர் கணேஷ் ராக். பெண் குழந்தை பிறந்ததைக் கேக் வெட்டி கொண்டாடு கின்றனர்.படங்கள்: ஊடகம் -

புனே: மகா­ராஷ்­டி­ரா­வைச் சேர்ந்த மருத்­து­வர் ஒரு­வர் பிர­ச­வத்­தில் பெண் குழந்தையைப் பெற்றெடுக் கும் தாயி­டம் கட்­ட­ணம் எது­வும் பெறா­மல் இல­வ­ச­மாக மருத்­து­வச் சேவை வழங்கி வரு­கி­றார்.

மகா­ராஷ்­டிரா மாநி­லம், புனே­வில் உள்ள ஹதப்­சார் என்ற பகு­தி­யில் மகப்­பேறு, பல்­நோக்கு மருத்­துவமனையை நடத்தி வரு­கி­றார் மருத்­து­வர் கணேஷ் ராக்.

அதிகளவில் பெண் குழந்­தை­களை இந்த உல­கிற்கு கொண்டு வர பெற்­றோரை ஊக்­கு­விக்­கும் முயற்­சி­யாக பெண் குழந்­தை­கள் பிறந்­தால் இந்த மருத்துவமனையில் கட்­ட­ணம் வசூ­லிக்­கப்படு­வ­தில்லை. பிறக்­கும் குழந்தைகளை ஒரு தேவ­தை­யா­க­வும் வரவேற்று உற்­சா­கப்­படுத்­து­கின்­ற­னர் மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­தி­னர்.

கடந்த 11 ஆண்­டு­க­ளாக இது வரை பிறந்­துள்ள ஏறக்­கு­றைய 2,400 பெண் குழந்­தை­க­ளுக்கு மருத்­துவமனைக் கட்­ட­ணம் என்று எது­வும் வசூ­லிக்­கா­மல், இல­வ­ச­மாக பிர­ச­வம் பார்க்­கப்­பட்டு தாயும் சேயும் வீடு திரும்­பு­கின்­ற­னர்.

இது­பற்றி மருத்துவர் கணேஷ் ராக் கூறும்­போது, "இது­வரை எனது மருத்­து­வ­ம­னை­யில் 2,430 பெண் குழந்­தை­கள் பிறந்துள்­ளன. இதற் காக பெற்­றோ­ரி­டம் சிகிச்சை கட்­ட­ணம் என எது­வும் பெற்றதில்லை.

"எங்கள் மருத்­து­வ­ம­னை­யில் பெண் குழந்­தை­கள் பிறக்­கும்­போதெல்லாம் அதனைச் சிறப்­பு­டன் கொண்­டாடுகிறோம். பலூன், பூக்­க­ளைக் கொண்டு அலங்­கா­ரம் செய்து, கேக் வெட்டி, பெற்­றோர் மீது பூக்­க­ளைத் தூவி­ மகிழ்­வு­டன் கொண்­டாடுகிறோம்.

"தாயும் சேயும் மருத்­துவமனை யில் இருந்து வீடு திரும்­பும்­போது, அலங்­க­ரிக்­கப்­பட்ட ஆட்­டோ­வில் வீடு வரை கொண்­டு­சென்று விட்டு வர­வும் ஏற்­பாடு செய்து தரு­கி­றோம்," என்கிறார்.

நாட்­டில் நிலவும் பெண் சிசுக் கொலை பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் வகை­யில் கடந்த 2012ல் இம்முயற்­சி­யைத் தொடங்­கி­னோம்.

அர­சின் புள்­ளி­வி­வ­ரப்­படி, கடந்த 10 ஆண்­டு­களில் 6 கோடி பெண் சிசுக்­கள் கரு­வி­லேயே கொல்­லப் பட்­டுள்­ளன. இதுபோன்ற விழிப்புணர்வு முயற்­சி­க­ளால்தான் இந்தப் பிரச்­னைக்குத் தீர்வு காணமுடி­யும் என நம்­புவதாகவும் ­கணேஷ் ராக் தெரிவித்துள்ளார்.