மகளைத் துண்டு துண்டாக வெட்டிய காதலனுக்கு மரண தண்டனை: காதலியின் தந்தை வலியுறுத்து

2 mins read
54893d80-3793-46ca-b973-1983f7445060
ஷ்ரதா. படம்: ஊடகம் -

புது­டெல்லி: தன் மக­ளைக் கொடூ­ர­மா­கக் கொன்ற காத­ல­னுக்கு மரண தண்­டனை வழங்க வேண்­டும் என கொல்­லப்­பட்ட பெண்­ணின் தந்தை கூறி­யுள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வைச் சேர்ந்த 26 வய­தான ஷ்ர­தாவை அவ­ரது காத­லன் அஃப்தாப் அண்­மை­யில் கொலை செய்­துள்­ளார். மேலும், ஷ்ர­தா­வின் உடலை 35 துண்­டு­க­ளாக வெட்டி, டெல்­லி­யின் வெவ்­வேறு பகு­தி­களில் வீசி­யுள்­ளார்.

இதன் மூலம் இந்­தக் கொலை விவ­கா­ரத்தை காவல்­து­றை­யால் கண்­டு­பி­டிக்க இய­லாது என அவர் கரு­தி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், தன் மகள் கடத்­தப்­பட்­டி­ருக்­க­லாம் என ஷ்ர­தா­வின் தந்தை டெல்லி காவல்­து­றை­யில் புகார் அளிக்க, அதன் அடிப்­ப­டை­யில் அஃப்தாப் கைது செய்­யப்­பட்­டார். அவர் அளித்த வாக்­கு­மூ­லத்­தில் பல்­வேறு அதிர்ச்­சித் தக­வல்­கள் தெரி­ய­வந்­துள்­ளன.

அஃப்தாப்­புக்கு வேறொரு பெண்­ணு­டன் தொடர்­புள்­ளது தெரியவந்ததால் தன்னைத் திரு­மணம் செய்­து­கொள்ள வேண்­டும் என அஃப்தாப்பை அவர் வற்­பு­றுத்­தி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

"இத­னால் கோப­ம­டைந்த அஃப்தாப், தின­மும் இரவு நேரத்­தில் ஷ்ர­தாவை அடித்து துன்­பு­றுத்தி உள்­ளார். காத­ல­னுக்­காக பெற்­றோரை எதிர்த்து வீட்­டில் இருந்து வெளி­யே­றி­ய­தால், தனது இக்­கட்­டான நிலை­கு­றித்து பெற்­றோ­ரி­டம் ஷ்ர­தா­வால் எந்த விவ­ரத்­தை­யும் பகிர்ந்­து­கொள்ள முடி­ய­வில்லை.

"இத­னால் தமது பள்­ளிப் பருவ நண்­ப­ரான லட்­சு­ம­ணன் என்­ப­வ­ரி­டம் நடந்த அனைத்­தை­யும் பகிர்ந்­துள்­ளார். அவர் மூலம் ஷ்ர­தா­வின் மூத்த சகோ­த­ர­ருக்கு அனைத்­தும் தெரி­ய­வந்­தது. இதன் பிறகே ஷ்ர­தா­வின் தந்தை காவல்­து­றையை அணு­கி­யுள்­ளார்," என காவல்­துறை தரப்­பில் கூறப்­ப­டு­வ­தாக இந்­திய ஊட­கச் செய்தி தெரி­வித்­துள்­ளது.

ஷ்ர­தா­வு­ட­னான வாக்­கு­வா­த­மும் சண்­டை­யும் முற்­றி­விட்ட நிலை­யில், வீட்­டில் இருந்த தலை­ய­ணை­யைக் கொண்டு அவ­ரது வாய், மூக்கை நீண்ட நேரம் அழுத்­தி­யுள்­ளார் அஃப்தாப். இதில் மூச்­சுத்­தி­ணறி ஷ்ரதா இறந்­து­போக, அதன் பிறகு அவ­ரது உடலை துண்டு துண்­டாக வெட்டி புதி­தாக ஒரு குளிர்­ப­த­னப் பெட்டி வாங்கி அதில் வைத்­துள்­ளார் அஃப்தாப்.

பல வாரங்­க­ளுக்கு முன்பே ஷ்ரதா கொல்­லப்­பட்­ட­தால், அவ­ரது உட­லில் இருந்து துர்­நாற்­றம் வீசா­மல் இருக்க அஃப்தாப் தின­மும் ஊது­பத்­தி­க­ளைக் கொளுத்தி வைத்­துள்­ளார்.

அமெ­ரிக்க இணை­யத்­தொ­டர் ஒன்றை பார்த்த பிறகே தன் காத­லியை இவ்­வாறு கொடூ­ர­மா­கக் கொலை செய்­யும் எண்­ணம் தமக்கு ஏற்­பட்­ட­தாக அவர் தனது வாக்­கு­மூ­லத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.

சில நாள்­க­ளுக்கு முன்பே தனது நண்­பர்­கள் சில­ரைத் தொடர்பு கொண்டு பேசி­யுள்­ளார் ஷ்ரதா. அப்­போது அஃப்தாப் தம்மை கொலை செய்ய வாய்ப்­புள்­ள­தா­க­வும் தம்­மைக் காப்­பாற்­றும்­ப­டி­யும் கேட்­டுக்­கொண்­ட­தா­கத் தெரி­கிறது. சில நண்­பர்­கள் ஷ்ர­தாவை தேடி வீட்­டுக்கு வந்­த­போது, அஃப்தாப் அவர்­க­ளி­டம் கடும் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்டு விரட்டி அடித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, ஷ்ர­தா­வின் உடல் பாகங்­களை வீசி­ய­தாக அஃப்தாப் குறிப்­பிட்ட இடங்­க­ளுக்கு அழைத்­துச் சென்று அந்த பாகங்­க­ளைக் கண்­டெ­டுக்க காவல்­துறை முயற்சி மேற்­கொண்­டுள்­ளது. ஷ்ர­தா­வின் தலைப்­ப­கு­தி­யும் அவ­ரது உடலை வெட்­டு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட கத்­தி­யும் இன்­னும் கிடைக்­க­வில்லை என காவல்­துறை தெரி­வித்­தது.