மருத்துவமனை வளாக குடியிருப்பில் தீ விபத்து; மருத்துவத் தம்பதியர் உள்பட ஆறு பேர் உயிரிழப்பு

1 mins read
6ff8daec-9f21-4f6b-9ae3-c88c29e91f88
-

ராஞ்சி: மருத்­து­வ­மனை வளா­கம் ஒன்­றில் அதி­காலை வேளை­யில் ஏற்­பட்ட தீ விபத்­தில் சிக்கி மருத்­துவ தம்­ப­தி­யர் உயி­ரி­ழந்த சம்­ப­வம் ஜார்க்­கண்ட் மாநி­லத்­தில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்த விபத்­தில் ஆறு பேர் பலி­யா­ன­தா­க­வும் 25 நோயா­ளி­கள் உயிர் தப்­பி­ய­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தன்­பாத் மாவட்­டத்­தில் இயங்கி வரும் ஹஜ்ரா நினைவு மருத்­து­வ­ம­னை­யில் ஏரா­ள­மான நோயா­ளி­கள் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இம்­ம­ருத்­து­வ­மனை வளா­கத்­தில் சிறிய குடி­யி­ருப்­புப் பகு­தி­யும் அமைந்­துள்­ளது.

மருத்­து­வர் விகாஸ் ஹஜ்­ரா­வும் அவ­ரது மனை­வி­யும் மருத்­து­வ­ரு­மான பிரே­மா­வும் அங்கு வசித்து வந்­த­னர். அவர்­க­ளின் வீட்­டுப் பணி­யா­ள­ரான தாரா­வும் உற­வி­னர் ஒரு­வ­ரும் தங்கி இருந்­த­னர்.

இந்­நி­லை­யில், நேற்று அதி­காலை­யில் இந்­தக் குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் தீப்­பி­டித்­தது. அடுத்த சில நிமி­டங்­களில் வேக­மா­கப் பர­விய தீயால் பெரும் புகை மூண்­டது. வீட்­டில் அயர்ந்து தூக்­கிக்கொண்­டி­ருந்த மருத்­து­வர் ஹஜ்ரா உள்­ளிட்­டோர் வீட்­டில் இருந்து வெளி­யேற முடி­யா­மல் சிக்­கிக்கொண்­ட­னர். கடும் புகை­மூட்­டம் கார­ண­மாக அவ­ரும் அவ­ரது மனைவி, உற­வி­னர், வீட்­டுப் பணி­யா­ளர் உள்­ளிட்ட ஐந்து பேர் மூச்சுத் திணறி அடுத்­த­டுத்து உயிரி­ழந்­த­தா­கத் தெரி­கிறது.

இடி­பா­டு­களில் சிக்­கிய ஒரு­வர், மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். எனி­னும், சிகிச்சை பல­னின்றி அவர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

அதி­காலை சுமார் இரண்டு மணி­ய­ள­வில் தீ விபத்து ஏற்­பட்­டதை அறிந்து, விரைந்து வந்த தீய­ணைப்­புத் துறை­யி­னர் துரித கதி­யில் செயல்­பட்டு நோயா­ளி­களை மீட்­ட­னர். மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.