தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'கருணைக் கொலை' தொடர்பில் தளர்த்தப்பட்டுள்ள விதிகள்

1 mins read
7075034a-37a3-41aa-9549-20f125984d83
-

வாழ்­வின் இறு­திக்­கட்­டத்­தில் இருப்­போர் சுய­நி­னைவை இழந்­தாலோ சுய­மாக முடி­வெ­டுக்­கும் திறனை இழந்­தாலோ அவர் சார்­பாக அவ­ரால் குறிப்­பி­டப்­படும் வேறொ­ரு­வ­ருக்கு அந்த அதி­கா­ரத்தை வழங்­கும் சட்­ட­பூர்­வ­மான ஆவ­ணம் 'லிவிங் வில்' அல்­லது மேம்­பட்ட மருத்­துவ அதி­கா­ரக் குறிப்பு எனப்­படு­கிறது.

'கரு­ணைக் கொலை' எனும் முறை­யின்­கீழ் நோயா­ளி­யின் வாழ்­நாளை நீட்­டிக்­கும் மருத்­துவ சிகிச்­சை­களை நிறுத்­து­வது தொடர்­பில் முடி­வெ­டுக்க இது வழி­வ­குக்­கிறது.

இந்தச் சட்­ட­ரீ­தி­யான ஆவ­ணத்தை ஒரு­வர் தயா­ரிப்­ப­தற்கு உரிய விதி­களை இந்­திய உச்ச நீதி­மன்­றம் தளர்த்­தி­யுள்­ளது.

நீதி­ப­திக்­குப் பதில், அனு­மதி பெற்ற பத்­தி­ரத்­துறை பதி­வா­ளர் அல்­லது அர­சி­தழ் பதிவு பெற்ற அலு­வ­லர் முன்­னி­லை­யில் இனி இத்­த­கைய உயிலை எழு­த­லாம்.

இத­னை­ய­டுத்து தேசிய அள­வில் முதல்­மு­றை­யாக மும்­பை­யைச் சேர்ந்த புகழ்­பெற்ற மருத்­து­வர் ஒரு­வர் இத்­த­கைய உயிலை எழு­தி­யுள்­ளார்.

மகப்­பேற்று மருத்­து­வ­ரான 53 வயது நிக்­கில் தத்­தார், அந்­தி­மக்­கா­லத்­தில் முடி­வெ­டுக்­கும் திறனை இழக்க நேரிட்­டால் தனக்கு அளிக்கப்படும் மருத்­துவ சிகிச்சை குறித்­துத் தன் சார்­பா­கத் தனது மனைவி முடி­வெ­டுக்­க­லா­மென உயிலில் தெரிவித்துள்ளார்.