தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தடை விதித்தும் பேரணி நடத்திய எதிர்க்கட்சிகள்

2 mins read
c9a273a3-8bb9-4d1c-8472-997c0a15e25c
நாடா­ளு­மன்­றத்­தில் வர­வு­செ­ல­வுக் கூட்­டத்­தொ­ட­ரின் இரண்­டா­வது அமர்வு திங்­கள்­கிழமை தொடங்­கிய நிலை­யில், அதானி முறை­கேடு விவ­கா­ரம், ராகுல் காந்தி மன்­னிப்­புக் கேட்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வரும் ஆளுங்­கட்சி போன்ற கார­ணங்­க­ளால் மூன்­றா­வது நாளாக புதன்­கி­ழ­மை­யும் நாடா­ளு­மன்­றம் முடங்­கி­யது. படம்: ராய்ட்டர்ஸ் -

அதானி முறைகேடு விவகாரத்தை விசாரிக்க வலியுறுத்து

புது­டெல்லி: நாடா­ளு­மன்­றத்­தில் வர­வு­செ­ல­வுக் கூட்­டத்­தொ­ட­ரின் இரண்­டா­வது அமர்வு திங்­கள்­கிழமை தொடங்­கிய நிலை­யில், அதானி முறை­கேடு விவ­கா­ரம், ராகுல் காந்தி மன்­னிப்­புக் கேட்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வரும் ஆளுங்­கட்சி போன்ற கார­ணங்­க­ளால் மூன்­றா­வது நாளாக புதன்­கி­ழ­மை­யும் நாடா­ளு­மன்­றம் முடங்­கி­யது.

அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த ஹிண்­டன்­பெர்க் ஆய்வு நிறு­வ­னம், அதானி குழு­மம், தனது பங்­கு­க­ளின் விலையை உயர்த்­திக் காட்டி முறை­கேட்­டில் ஈடு­பட்­ட­தாக கடந்த ஜன­வரி மாதம் அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

அதானி முறை­கேடு தொடர்­பாக நாடா­ளு­மன்­றக் கூட்­டுக் குழு விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டக் கோரி எதிர்க்­கட்­சி­கள் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரும் நிலை­யில், மத்­திய அரசு கோரிக்­கையை நிரா­க­ரித்து வரு­கிறது.

அதானி முறை­கேடு விவ­கா­ரம் குறித்து நாடா­ளு­மன்­றக் கூட்­டுக்­குழு விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டக்­கோரி எதிர்க்­கட்­சி­யி­னர் தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

எதிர்க்­கட்­சி­யி­னர் நாடா­ளு­மன்­றத்­திற்கு வெளியே பேரணி நடத்­தக்­கூ­டும் என்­ப­தால், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக நாடா­ளு­மன்­றத்­திற்கு வெளியே ஒன்று­கூ­டு­வ­தற்­குத் தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்டது. நாடா­ளு­மன்­றத்­திற்கு வெளியே குவிக்­கப்­பட்­டி­ருந்த காவல்­து­றை­யி­னர் தடுப்­பு­க­ளை­யும் அமைத்­தி­ருந்­த­னர்.

இருப்­பி­னும், எதிர்க்­கட்­சி­யி­னர் தடையை மீறி நாடா­ளு­மன்­றத்­திற்கு வெளியே ஒன்­று­தி­ரண்டு அங்­கி­ருந்து பேர­ணி­யாகச் சென்று அதானி முறைகேடு குறித்து புகாரளிக்க அம­லாக்­கத்­துறை அலு­வ­ல­கம் நோக்கிச் சென்­ற­னர்.

அனு­மதி இன்றி பேர­ணி­யா­கச் சென்­ற­தால் எதிர்­க்கட்­சி­யி­னரை காவல்­து­றை­யி­னர் தடுத்து நிறுத்­தி­னர்.

புதன்கிழமை நண்பகல் 12.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் பேரணியில் காங்கிரஸ் தலைமையில் திமுக, இடதுசாரி, சமாஜ்வாடி, உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, ஆம்ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. எதிர்­க்கட்­சி­யி­னர் நடத்­திய இந்தப் பேர­ணி­யில் திரி­ணா­மூல் காங்­கிரஸ் கட்­சி­யும், தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­யும் பங்­கேற்­க­வில்லை.