பயணியைத் தேள்கொட்டியதால் ஏர்-இந்தியா பாதுகாப்பு நடவடிக்கை

1 mins read
491a4b25-7114-4ec7-ae5b-3c67c6765eaf
-

மும்பை: நாக்­பூ­ரில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்­தியா விமா­னத்­தில் பய­ணித்த பெண்ணை தேள் கொட்­டிய சம்­ப­வம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி இருக்­கிறது.

கடந்த மாதம் நடந்த இந்­தச் சம்­ப­வத்தை அந்த விமான நிறு­வ­னம் உறுதி செய்­தது.

தேள் கொட்­டி­ய­தால் பாதிக்­கப்­பட்ட பெண் பயணி ஒரு­வர் மும்பை மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்­னர் குண­ம­டைந்­தார். "கடந்த ஏப்­ரல் 23 ஆம் தேதி ஏர் இந்­தியா விமா­னம் AI 630-இல் பய­ணித்த பெண்ணை தேள் கொட்­டி­யது. இது­போன்ற சம்­ப­வம் அரங்­கே­று­வது மிக­வும் அரி­தான ஒன்று ஆகும்," என்று ஏர் இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

இந்த சம்­ப­வத்­தைத் தொடர்ந்து விமா­னம் முழுக்க தீவிர சோதனை நடத்­தப்­பட்­டது. சோத­னை­யில் தேள் கண்­டு­பிடிக்­கப்­பட்­டது.

மேலும் விமா­னத்­தில் வேறு ஏதே­னும் பூச்­சி­கள் நுழை­வ­தைத் தடுக்­கும் வகை­யில், புகை­ய­டிக்­கப்­பட்­டது.

அத்­து­டன் விமா­னத்­தின் உண­வுத் துறை­யி­டம் அவர்­க­ளது பகு­தியை முழு­மை­யாக சோதனை செய்ய ஏர் இந்­தியா வலி­யு­றுத்­தி­யது.

உண­வுப் பொருட்­க­ளால் தேள் விமா­னத்­திற்­குள் நுழைந்­தி­ருக்­க­லாம் என்­ப­தால், அந்­தப் பகு­தி­யில் தேவைப்­படும் பட்­சத்­தில் புகை போட­வும் வலி­யு­றுத்தி இருப்­ப­தா­க தெரி­வித்­தது.