தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நைஜீரியாவில் அல்லல்படும் 150 இந்தியர்கள் தங்களை மீட்க மத்திய அரசுக்கு கோரிக்கை

2 mins read
d82113a3-2a39-45c2-8e18-bddee0333532
-

கோபால்­கஞ்ச்: பீகார், உத்­த­ரப் பிர­தே­சம், ஆந்­தி­ரப் பிர­தே­சம், மேற்கு வங்­கா­ளம், ஜார்க்­கண்ட் உள்­ளிட்ட மாநி­லங்­க­ளைச் சேர்ந்த 150 தொழி­லா­ளர்­கள் தாங்­கள் நைஜீ­ரி­யா­வில் சிறை­பி­டிக்­கப்பட்­டுள்­ள­தா­க­வும் தங்­களை மீட்க மத்­திய அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்றும் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

சிஎன்­என்-நியூஸ் 18 ஊடகத்துக்கு அவர்­கள் அனுப்பி யுள்ள காணொ­ளிச் செய்­தி­யில், தாங்கள் தாய­கம் திரும்­பு­வ­தற்கு உரிய உதவிகளைச் செய்து தரும்­படி இந்­திய அர­சாங்­கத்தை கேட்­டுக்கொண்­டுள்­ள­னர்.

நைஜீ­ரி­யா­வில் தங்களைப் பணியமர்த்­திய எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­ன அதி­கா­ரி­கள் முறை­யாகச் சம்­ப­ளம், உணவு, மருத்துவ வசதிகளை வழங்­கு­வ­தில்லை என­வும் இந்­தி­ய ஊழியர் ­கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ள­னர்.

நைஜீ­ரியா நாட்­டின் லேக்கி நக­ரில் 'தி டாங்­கோட்' எண்­ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை அமைக்கப்­பட்டு வரு­கிறது. இங்கு பணி­யாற்­று­வ­தற்­காக கடந்த 2019ல் 150 இந்திய ஊழியர்கள் சென்ற னர். ஆனால், அவர்களுக்கு கடந்த ஒன்பது மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கப்பட வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காணொளியில் பேசிய ஊழியர் ஒரு­வர், "பிர­த­மர் மோடி அவர்­களுக்கு, நாங்­கள் இந்­தி­யா­வுக்குத் திரும்பி வர விரும்பு கிறோம். எங்­களது சம்பளத்தை சம்பந்தப்பட்ட நிறு­வ­னம் தர மறுக்­கிறது. எங்­களை மீட்க நட­ வ­டிக்கை எடுக்கவேண்­டும்," என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பீகார் மாநி­லம், கோபால்­கஞ்ச் மாவட்ட ஆட்­சி­யர் நேவல் கிஷோர் சவுத்ரி கூறும் போது, "நைஜீ­ரிய நிறு­வ­னத்­தில் கோபால்­கஞ்ச் மாவட்­டத்தின் 11 பேர் பணி­யாற்றுகின்­ற­னர். அவர் ­க­ளது குடும்­பத்தினர் மாவட்ட நிர்­வா­கத்­தி­டம் மனு அளித்­துள்­ள­னர். ஊழியர்களை மீட்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்­றார்.

நைஜீ­ரி­யா­வில் சிக்­கி­யுள்ள அனைத்து ஊழியர்­களும் விரை­வில் மீட்­கப்­ப­டு­வார்­கள் என எம்.பி. அலோக் குமார் சுமன் நம்பிக்கைத் தெரிவித்­துள்­ளார்.