புதுடெல்லி: இந்தியாவில் வெப்பம் மே மாதத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதிகமான வெப்பத்தால் மதிய நேரங்களில் மக்கள் வெளியே செல்லவே தயங்கும் சூழலே இருந்து வருகிறது.
மக்களை வாட்டி வதைக்கும் இந்த வெப்ப அலை இன்றோடு முடிவடைகிறது.
இன்று முதல் வெப்பநிலை மெல்ல மெல்ல குறைந்துவிடும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் நேற்று தெரிவித்தது.
தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு நிலையம் தகவல் தெரிவித்துள்ளது. 24ஆம் தேதி கேரளாவில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாநிலங்களில் மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.