உகாதி, குடி பத்வா புத்தாண்டு கோலாகலம்

3 mins read
f49d9c32-a65e-4718-a014-e65d1be246ba
-
multi-img1 of 2

இந்­துக்­க­ளால் கொண்­டா­டப்­படும் மிக முக்­கிய பண்­டி­கை­களில் தெலுங்கு வரு­டப்­பி­றப்­பான உகா­தி­யும் ஒன்று. புதிய காரி­யங்­கள் தொடங்க உகந்த நாளா­கக் கரு தப்­படும் இத்­தி­ரு­நாளை இந்­தி­யா­வில் மட்­டு­மன்றி உலகெங்­கும்­வாழ் இந்­தி­யர்­களும் கோலா­க­ல­மாக இன்று கொண்­டா­டு­கின்­ற­னர்.

படைப்­புக் கட­வு­ளான பிரம்­மன் பங்­குனி மாத அமா­வா­சைக்கு அடுத்­த­நா­ளான பிர­த­மை­யில்­தான் புது யுகத்தை படைத்­தா­ராம். அத­னால், யுகம்+ ஆதி=யுகாதி அல்­லது உகாதி என அழைக்­கப்­ப­டு­கிறது.

ஆந்­திரா, தெலுங்­கானா, கர்­நா­ட­கா­வில் உகாதி என­வும் மகா­ராஷ்­டிரா, கோவா­வில் குடி பத்வா எனும் பெய­ரி­லும் இப்­புத்­தாண்டை மக்­கள் கொண்­டா­டு­கி­றார்­கள்.

மணிப்­பூ­ரில் 'சாஜிபு நொங்மா பன்பா' என­வும் சிந்து இன­மக்­கள் 'சேட்டி சந்த்' என­வும் கொண்­டாடி மகிழ்­கின்­ற­னர்.

வீடு­களை மாவி­லை­க­ளால் அலங்­க­ரிப்­ப­தன் மூலம் விழாக்­கள் தொடங்­கு­கின்­றன. ரங்­கோலி­கள் போடப்­ப­டு­கின்­றன.

உகாதி பண்­டிகை நாளில் அதி­கா­லை­யில் எழுந்து எண்­ணெய் தேய்த்து நீராடி, புத்­தாடை உடுத்தி தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களைச் சந்­தித்து வாழ்த்­து­கின்­ற­னர்; வாழ்த்து பெறு­கின்­ற­னர்.

ஒரு கூடல் பண்­டி­கை­யாகக் கொண்­டா­டப்­படும் இந்­நா­ளில், புளி­யோ­தரை, பால் பாய­ாசம், தித்­திப்பு போளி, தனிச்­சி­றப்பு மிக்க பச்­ச­டி­யு­டன் படைத்து ஏழு இரா­கங்­களில் பாடி இறை­வ­ழி­பாடு நடத்­து­வர்.

இந்­நா­ளில் தொடங்­கப்­படும் காரி­யங்­கள் பெரிய அள­வில் வளர்ச்­சி­யைக் கொடுக்­கும் என்­ப­தால், ஏரா­ள­மா­னோர் இந்­நா­ளில் புதிய தொழில்­க­ளைத் தொடங்க ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர். வீடு, மனை, தொழில் சார்ந்த பணி­களுக்கு இந்­நா­ளில் அச்சாரம் போடப்படுகிறது, அடிக்கல் நாட்டப்படுகிறது. நல்ல நேரம் பார்க்­க­வேண்­டிய தேவை­யில்லை என்­ப­தால், இந்­நா­ளில் திரு­ம­ணங்­களும் இடம்பெறுகின்­றன.

வாழ்க்கை என்­பது இன்­பம், துன்­பம், வெற்றி, தோல்வி என அனைத்­தும் கலந்த கலவை. இதனை எதிர்­கொள்ள பொறுமை, சகிப்­புத்­தன்மை அவ­சி­யம் எனும் தத்­து­வத்தை உணர்த்­து­வ­தற்­காகவே உகாதி நாளில் ஒரு வித்தியாச­மான பச்­ச­டியை தயா­ரித்து சுவைக்­கின்­ற­னர்.

வேப்­பம்பூ, மாவடு, புளி, வெல்­லம், மிள­காய், உப்பு ஆகியவற்­றைக் கொண்டு பச்­சடி தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. இதில் கசப்பு, புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, காரம், உப்பு என அறு­சுவை கலந்து இருப்­பதுபோல் இன்­பம், துன்­பம், ஏமாற்­றம், விரக்தி, தோல்வி, வெறுமை எல்­லாம் சேர்ந்திருப்பதே வாழ்க்கை எனும் தத்­து­வம் உணர்த்­தப்படுகிறது. இப்பச்­சடியை கன்­னட மொழி­யில் 'பேவு பெல்லா' என்கின்றனர்.

இந்­துக்­க­ளால் கொண்­டா­டப்­படும் மிக முக்­கிய பண்­டி­கை­களில் தெலுங்கு வரு­டப்­பி­றப்­பான உகா­தி­யும் ஒன்று. புதிய காரி­யங்­கள் தொடங்க உகந்த நாளா­கக் கரு தப்­படும் இத்­தி­ரு­நாளை இந்­தி­யா­வில் மட்­டு­மன்றி உலகெங்­கும்­வாழ் இந்­தி­யர்­களும் கோலா­க­ல­மாக இன்று கொண்­டா­டு­கின்­ற­னர்.

படைப்­புக் கட­வு­ளான பிரம்­மன் பங்­குனி மாத அமா­வா­சைக்கு அடுத்­த­நா­ளான பிர­த­மை­யில்­தான் புது யுகத்தை படைத்­தா­ராம். அத­னால், யுகம்+ ஆதி=யுகாதி அல்­லது உகாதி என அழைக்­கப்­ப­டு­கிறது.

ஆந்­திரா, தெலுங்­கானா, கர்­நா­ட­கா­வில் உகாதி என­வும் மகா­ராஷ்­டிரா, கோவா­வில் குடி பத்வா எனும் பெய­ரி­லும் இப்­புத்­தாண்டை மக்­கள் கொண்­டா­டு­கி­றார்­கள்.

மணிப்­பூ­ரில் 'சாஜிபு நொங்மா பன்பா' என­வும் சிந்து இன­மக்­கள் 'சேட்டி சந்த்' என­வும் கொண்­டாடி மகிழ்­கின்­ற­னர்.

வீடு­களை மாவி­லை­க­ளால் அலங்­க­ரிப்­ப­தன் மூலம் விழாக்­கள் தொடங்­கு­கின்­றன. ரங்­கோலி­கள் போடப்­ப­டு­கின்­றன.

உகாதி பண்­டிகை நாளில் அதி­கா­லை­யில் எழுந்து எண்­ணெய் தேய்த்து நீராடி, புத்­தாடை உடுத்தி தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களைச் சந்­தித்து வாழ்த்­து­கின்­ற­னர்; வாழ்த்து பெறு­கின்­ற­னர்.

ஒரு கூடல் பண்­டி­கை­யாகக் கொண்­டா­டப்­படும் இந்­நா­ளில், புளி­யோ­தரை, பால் பாய­ாசம், தித்­திப்பு போளி, தனிச்­சி­றப்பு மிக்க பச்­ச­டி­யு­டன் படைத்து ஏழு இரா­கங்­களில் பாடி இறை­வ­ழி­பாடு நடத்­து­வர்.

இந்­நா­ளில் தொடங்­கப்­படும் காரி­யங்­கள் பெரிய அள­வில் வளர்ச்­சி­யைக் கொடுக்­கும் என்­ப­தால், ஏரா­ள­மா­னோர் இந்­நா­ளில் புதிய தொழில்­க­ளைத் தொடங்க ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர். வீடு, மனை, தொழில் சார்ந்த பணி­களுக்கு இந்­நா­ளில் அச்சாரம் போடப்படுகிறது, அடிக்கல் நாட்டப்படுகிறது. நல்ல நேரம் பார்க்­க­வேண்­டிய தேவை­யில்லை என்­ப­தால், இந்­நா­ளில் திரு­ம­ணங்­களும் இடம்பெறுகின்­றன.

வாழ்க்கை என்­பது இன்­பம், துன்­பம், வெற்றி, தோல்வி என அனைத்­தும் கலந்த கலவை. இதனை எதிர்­கொள்ள பொறுமை, சகிப்­புத்­தன்மை அவ­சி­யம் எனும் தத்­து­வத்தை உணர்த்­து­வ­தற்­காகவே உகாதி நாளில் ஒரு வித்தியாச­மான பச்­ச­டியை தயா­ரித்து சுவைக்­கின்­ற­னர்.

வேப்­பம்பூ, மாவடு, புளி, வெல்­லம், மிள­காய், உப்பு ஆகியவற்­றைக் கொண்டு பச்­சடி தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. இதில் கசப்பு, புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, காரம், உப்பு என அறு­சுவை கலந்து இருப்­பதுபோல் இன்­பம், துன்­பம், ஏமாற்­றம், விரக்தி, தோல்வி, வெறுமை எல்­லாம் சேர்ந்திருப்பதே வாழ்க்கை எனும் தத்­து­வம் உணர்த்­தப்படுகிறது. இப்பச்­சடியை கன்­னட மொழி­யில் 'பேவு பெல்லா' என்கின்றனர்.