சிரிப்பே சிறந்த மருந்து

2 mins read
349b14d2-e2d4-4e95-b2e7-e54c370b7511
-

சிரிப்­பு­தான் சிறந்த மருந்து என்­பது ஆங்­கில பழ­மொழி மட்­டு­மல்ல. அதை அறி­வி­யல் ஆய்­வு­கள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன. குறிப்­பாக நகைச்­சுவை உணர்­வும் சிரிப்­பும் நல­மான மூப்­ப­டை­த­லுக்கு உத­வும் என்று ஆய்­வு­கள் கூறி­யுள்­ளன.

சிரிக்­கும்­போது ரத்­தத்­தில் உயிர்­வாயு பெருகி ரத்த ஓட்­டம் சீர்­படும். அத்­து­டன் மற்­ற­வர்­க­ளு­டன் சேர்ந்து சிரிக்­கும்­போது மூளை­யில் உற்­சாக உணர்வை ஏற்­ப­டுத்­தும் எண்­டோர்­ஃபின் எனப்­படும் புர­தக்­கூ­று­கள் கோர்ட்­டி­சோல் எனப்­படும் சுரப்­பி­கள், நோய் எதிர்ப்பு அணுக்­கள் ஆகி­யவை மூளை­யி­லும் உட­லி­லும் வெளி­யா­கும் என்­றார் நரம்­பி­யல் மருத்­து­வர் மேட் பெல்­லஸ்.

இத­னால் சிரிப்பு இருக்­கும் இடத்­தில் பதற்­றம், குழப்­பம் போன்­றவை தோன்­றாது.

மேலும், சிரிக்­கும்­போது மார்பு வயிற்­றி­டைப் பகு­திக்கு பயிற்சி கிடைப்­ப­து­டன், இரு­மல் மேம்­படும் என்று அமெ­ரிக்க மருத்­து­வர் ரெபேக்கா ஏப்­நாண்டே கூறி­னார். ஆஸ்­துமா, மூச்­சுக்­கு­ழல் அழற்சி போன்ற நுரை­யீ­ரல் பிரச்­சி­னை­க­ளால் பீடிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­குச் சளி வெளி­யாக இது உத­வும் என்­றார் அவர்.

உண்­மை­யாக வாய்­விட்­டுச் சிரிக்­கும்­போது இத­யத் துடிப்பு 10 முதல் 20 விழுக்­காடு அதி­க­ரிக்­கும் என்­றும் உடல் அதிக கேல­ரி­களை எரிக்­கும் என்­றும் வாண்­டர்­பல்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் கூறி­யுள்­ள­னர்.

சிரிக்­கும்­போது தசை­கள் தளர்­வ­டை­யும், வலி குறை­யும் என்­றும் ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

அது மட்­டு­மல்ல தனி­யா­க­வும் ஒரு பயிற்­சி­யா­க­வும் சிரிப்­ப­தை­யும்­விட இயற்­கை­யா­க­வும் சுற்­றத்­தா­ரு­டன் இணைந்­தும் சிரிப்­பது உடல்­ந­ல­னுக்­கும் மன­ந­ல­னுக்­கும் உகந்­தது என்று டாக்­டர் பெல்­லஸ் கூறி­னார்.

நகைச்­சுவை, பழைய நினை­வு­கள் ஆகி­ய­வற்­றைப் பகிர்ந்­து­கொண்டு சிரிக்­கும்­போது நட்பு வட்­டம் பெரு­கும். தனி­மை­யான சூழ­லில் உள்­ள­தால் ஏற்­படும் மன இறுக்­கத்தை இது குறைக்­கும் என்று அவர் சொன்­னார்.

சிரிப்­ப­தால் மூளைச் செயல் பாடு மாறும் என்­றும் பல்­லாண்­டு­கள் தியா­னம் செய்­ப­வர்­க­ளின் மூளை­யில் நோயைக் குணப்­படுத்­தும் காமா கதிர் அலைகள் தூண்டப்­படும் என்­றும் மருத்­துவ ஆய்­வு­கள் காட்­டு­கின்­றன. சிரிப்­ ப­வர்­க­ளின் மூளை­யி­லும் இதைப் போலவே காமா கதிர் அலை­கள் தூண்­டப்­ப­டு­கின்­றன.

சிறிது நேரம் சிரித்­தா­லும் தெளி­வான சிந்­த­னை­யை­யும் மற்­ற­வர்­க­ளு­டன் வலு­வான பிணைப்­பை­யும் பெற முடி­யும் என்று ஹார்­வர்ட் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த உள­வி­யல் நிபு­ணர் நேட்­டலி கிறிஸ்­டீன் டாட்­டிலோ விளக்­கி­னார்.

தன்­னைத் தானே கிண்­ட­ல­டித்­துக் கொள்­வது, சமூக ஊட­கங்­க­ளி­லும் தொலைக்­காட்­சி­யி­லும் நகைச்­சு­வைத் துணுக்­கு­க­ளைப் பார்ப்­பது போன்­ற­வற்­றைச் செயது சிரிப்பை வர­வ­ழைக்­க­லாம் என்று மருத்­து­வர்­கள் கூறு­கின்­ற­னர். மேலும், வாழ்­வில் நன்றி சொல்ல கார­ணங்­களை அன்­றா­ட நாட்­கு­றிப்­பில் எழு­து­வ­து­போல ஒவ்வொரு நாளும் சிரிப்பை ஏற்படுத்திய மூன்று காரணங்களை எழுதி வந்தால் பதற்றம் குறையும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.