தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவா­ல் மிகுந்த பொருள்களின் இறக்குமதி

1 mins read
57698156-91cf-466f-ac5f-4c855f7c7a7d
பொருள்கள் வாங்­கு­வ­தற்­காக லிட்­டில் இந்­தி­யா­விற்கு வந்­தி­ருந்த மக்கள் கூட்டம். படம்: தமிழ் முரசு -

லிட்டில் இந்தியா சென்று பொங்கல் திருநாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் குறித்தும் பொங்கல் வர்த்தகத்தில் மும்முரமாக இருக்கும் வணிகர்கள், பொருள்கள் வாங்க விரைந்த மக்கள் எனப் பலதரப்பினரின் கருத்துகளையும் அறிந்து வந்தது தமிழ் முரசு.

"கடந்த ஒரு மாத­மாக பலத்த மழை பெய்து வரு­கிறது. இத­னால், இந்­தி­யா­வில் இருந்­தும் மலே­சி­யா­வில் இருந்­தும் கரும்பு, மஞ்­சள் கொத்து போன்­ற­வற்றை இறக்­கு­மதி செய்­வது கடி­ன­மாக இருக்­கிறது. பொருள்­க­ளைக் கொண்டு வரு­வதும் சவா­லாக இருக்­கிறது," என்று ஜோதி ஸ்டோர் புஷ்­பக் கடை தரப்­பில் தெரி­விக்­கப்பட்­டது.

நாளைக்­குள் இந்­தி­யா­வில் இருந்து பொருள்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வந்­து­வி­டும் என எதிர்­பார்க்­கப்­படு­கிறது. அதேநேரத்­தில், வானூர்­திக் கட்­ட­ண­ம் பல­ம­டங்கு கூடி­விட்­ட­தால் இம்­முறை பொருள்­க­ளின் விலை­யும் அதி­க­ரிக்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

காய்­கறி வாங்­கு­வ­தற்­காக லிட்­டில் இந்­தி­யா­விற்கு வந்­தி­ருந்த திரு­மதி சாந்­திக்­குப் பொங்­கல் பானை­களைப் பார்த்­த­தும் கொண்­டாட்ட உற்­சா­கம் தொற்­றிக்கொண்­டது.

-

"சிங்­கப்­பூ­ரில் வேளாண்மை செய்­யப்­ப­டு­வ­தில்லை. ஆனா­லும், உழ­வும் உழ­வர்­களும் இல்லை எனில், நம்­மில் எவ­ருக்­கும் உணவு கிடைக்­காது. உழ­வுத்­தொ­ழி­லுக்கு மிக முக்­கி­ய­மாக விளங்­கும் காளை மாடு­க­ளின், பால் தரும் பசுக்­களின் முக்­கி­யத்­து­வத்தை நகர்ப்­பு­றங்­களில் வாழ்­ப­வர்­களும் தெரிந்­து­கொள்ள வேண்­டும். அதற்­கா­கவே என் மகன்­கள் இரு­வ­ரை­யும் ஆண்­டு­தோ­றும் பொங்­கல் திரு­நாள் சம­யத்­தில் லிட்­டில் இந்­தி­யா­விற்கு அழைத்­துச் செல்­வேன்," என்று திரு­மதி ஜெயா சொன்­னார்.