புதுப்பொலிவுடன் மிளிரும் ஸ்ரீ சிவன் கோயில்

புதுப்பொலிவுடன் மிளிரும் ஸ்ரீ சிவன் கோயில்

1 mins read
c5b74e57-ebc8-4dbe-99de-347320901181
சிவாச்சாரியர்கள் நன்னீர்க் குடங்களைச் சுமந்து செல்கின்றனர். - படம்: த.கவி

பக்தர் கூட்டம் சூழ, பஞ்சாட்சர நாதம் ஒலிக்க கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோயிலில் திருக்குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை நடைபெற்றது.

காலை கிட்டத்தட்ட 8.30 மணியளவில் ஆலய கோபுரங்களுக்கு நன்னீர் ஊற்றப்பட்டு தீப ஆராதணை காட்டப்பட்டது.

புதுப்பொலிவுடன் மின்னும் ஆலய கோபுரங்கள், நுழைவாயில்.
புதுப்பொலிவுடன் மின்னும் ஆலய கோபுரங்கள், நுழைவாயில். - படம்: த.கவி

கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள பெருங்கூடாரத்தில் ஏறத்தாழ 20,000 பக்தர்கள் திரண்டனர்.

ஆலய தரிசனத்திற்காக வரிசையில் பக்தர் காத்திருக்கின்றனர்.
ஆலய தரிசனத்திற்காக வரிசையில் பக்தர் காத்திருக்கின்றனர். - படம்: த.கவி

தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, உள்துறை அமைச்சர் கா சண்முகம் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார்.

திருக்குடமுழுக்கு பற்றிய கூடுதல் விவரங்கள்: https://tm.sg/8QSX

குறிப்புச் சொற்கள்