மாற்றுத்திறனாளிகளுக்கு 1,100 வேலை, பயிற்சி வாய்ப்புகள்

2 mins read
37919c95-1b62-4565-bc6e-a0cb815c46de
பார்க்ராயல் கலெக்‌ஷன் மரினா பே ஹோட்டலுக்கு நேற்று வருகை புரிந்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (இடது) அங்கு கேக், பலகாரங்கள் செய்யும் பிரிவில் பணியாற்றும் கிலாசன் சியோங்கின் (வலது) வேலையைப் பார்வையிடுகிறார். நடுவில் அந்த ஹோட்டலின் பொது மேலாளர் திரு மெல்வின் லிம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு இவ்­வாண்டு இறு­திக்­குள் சுமார் 1,200 வேலை­களும் வேலைப் பயிற்சி வாய்ப்­பு­களும் உரு­வாக்­கப்­படும் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் தொடங்­கப்­பட்ட தேசிய வேலை­கள் மன்­றத்­தின், வேலை­களை உரு­வாக்­கும் மற்­றும் திறன்­களை மேம்­ப­டுத்­தும் முயற்­சி­களில் ஒன்­றா­க­வும் தற்­போ­துள்ள எஸ்ஜி எனே­பல் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யா­க­வும் இது அமை­கிறது.

தற்­போது மூன்று திட்­டங்­களின் வழி மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு 150 புதிய வேலை வாய்ப்­பு­கள், பயிற்சி, திறன் மேம்­பாடு ஆகி­ய­வற்றை வழங்க அர­சாங்­கம் பணி­யாற்றி வரு­கிறது என்று அமைச்­சர் நேற்று பென் பசி­ஃபிக் ஹோட்­டல் குழு­மத்­தின் கீழ் இயங்­கும் பார்க்­ரா­யல் கலெக்­‌ஷன் மரினா பே ஹோட்­ட­லுக்கு வருகை மேற்­கொண்­ட­போது தெரி­வித்­தார்.

இந்­தக் குழு­மம் தனது அலு­வ­ல­கங்­கள், சொகுசு அடுக்­கு­மாடி வீடு­கள் ஆகி­ய­வற்­றில் வீட்டு பரா­ம­ரிப்பு, அலு­வ­ல­கப் பணி­கள் ஆகிய வேலை­க­ளைச் செய்ய 27 மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு வாய்ப்­பளித்­தி­ருக்­கிறது. அடுத்து வரும் மாதங்­களில் மேலும் அத்­த­கைய ஒன்­பது பேர் சேர்ந்­துக்­கொள்­வார்­கள்.

புதி­தாக அறி­விக்­கப்­பட்ட இடைக்­கா­லப் பணி­ய­மர்வு பயிற்சி, பணி உள்­ள­கப் பயிற்சி, திறன் மேம்­பாடு ஆகி­யவை தற்­போ­துள்ள எஸ்ஜி எனே­பல் அமைப்பு நிர்­வ­கிக்­கும் 'ஓப்­பன் டோர்' எனும் மாற்­றுத்­தி­ற­னாளி வேலை­வாய்ப்­புத் திட்­டத்­தின் முயற்­சி­க­ளுக்­குக் கூடு­தல் உத­வி­யாக இருக்­கும்.

இத்­திட்­டத்­தில் சேர்ந்­து­கொள்ள முத­லா­ளி­க­ளுக்­கும் பயிற்சி வழங்­கு­நர்­க­ளுக்­கும் எஸ்ஜி எனே­பல் அமைப்பு ஊக்கமளிக்கும்.

இடைக்­கா­லப் பணி­ய­மர்வு பயிற்­சித் திட்­டத்­தின் மூலம் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு முழு­நேர அல்­லது பகு­தி­நேர வேலை­களை வழங்­கும் முத­லா­ளி­க­ளுக்கு அந்த ஊழி­யர்­க­ளுக்கு அர­சாங்­கம் 90% சம்­பள ஆத­ரவு அளிக்­கும்.

"மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் அல்­லது இதர சிர­மங்­களை எதிர்­நோக்­கு­ப­வர்­கள் என எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டி­ய­வர்­கள் இந்த கொவிட்-19 சூழலில் அதி­கம் பாதிக்­கப்­பட்டு இருக்கிறார்கள் சூழலில் அவர்­களுக்கு பொது­வில் சம்­பள ஆத­ர­வும் பயிற்­சி­யும் கொடுக்­கும் பட்­சத்­தில் அதையே மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு அதி­கம் கொடுக்­க வேண்­டும்," என்­றும் திரு மச­கோஸ் கேட்­டுக் கொண்­டார்.

இவர்­களும் இயல்­பா­ன­வர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்ற அவர்­களுக்­குத் தேவைப்­படும் வேலை­யிடச் சூழலை முதலாளிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.