மூன்று மணி நேரம் சேவைத் தடை

1 mins read
5be701f1-0c98-42c0-8074-14085a6ff231
வடக்கு-கிழக்கு வழித்தடத்தில் ரயில் சேவை தடைபட்டதை அடுத்து, சிராங்கூன் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் நேற்று இணைப்புப் பேருந்திற்காக வரிசைபிடித்து நின்ற பயணிகள். படம்: சாவ்பாவ் -

வடக்கு-கிழக்கு ரயில் பாதை: ரயிலுக்கு மின்சாரம் வழங்கும் அமைப்பில் கோளாறு

மின்­விநியோக அமைப்­பில் ஏற்­பட்ட கோளாறு கார­ண­மாக வடக்கு-கிழக்கு ரயில் பாதை­யில் நேற்­றுக் காலை­யில் மூன்று மணி நேரம் சேவை பாதிக்­கப்­பட்­டது.

காலை 9.53 மணிக்கு எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னம் வெளி­யிட்ட டுவிட்­டர் பதி­வில், வடக்கு-கிழக்கு ரயில் பாதை­யில் ரயில் சேவை மீண்­டும் தொடங்­கி­விட்­ட­தா­க­த் தெரி­வித்­தது.

பின்­னர் காலை 10.18 மணிக்கு வெளி­யான அடுத்த டுவிட்­டர் பதி­வில், குறிப்­பிட்ட பேருந்து நிறுத்­தங்­களில் இணைப்பு, இல­வ­சப் பேருந்து சேவை­கள் நிறுத்­தப்­பட்டு­விட்­ட­தா­கக் கூறப்பட்டது.

"புவாங்­கோக் நிலை­யத்­தில் மின்விநியோகச் சங்­கி­லிய அமைப்பு சேத­ம­டைந்­துள்­ளது. எங்­கள் பொறி­யா­ளர்­கள் அதைச் சரி­செய்­யும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். அதற்கு மூன்று மணி நேரம் ஆக­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது," என்று எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வனம் தெரி­வித்­தது.

காலை 7 மணி­ய­ள­வில் அந்­தக் கோளாறு ஏற்­பட்­ட­தாக அது குறிப்­பிட்­டது. சேவை பாதிப்­பால் ஏற்­பட்ட அசௌ­க­ரி­யங்­க­ளுக்­காக பயணி­கள் அனைவரிடமும் அந்­நி­று­வ­னம் மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­டது.

ரயில் சேவை பாதிப்பு குறித்து காலை 7.18 மணிக்கு டுவிட்­டர் வழி­யாக எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னம் அறி­வித்­தது. ஹார்­பர் ஃபிரன்ட் - சிராங்­கூன் நிலை­யங்­களுக்கு இடையே ரயில் சேவை தொடர்­வ­தா­க­வும் சிராங்­கூன் - பொங்­கோல் நிலை­யங்­க­ளுக்கு இடையே இல­வ­சப் பேருந்து சேவை­கள் வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் அது கூறி­யது.