மலேசிய தமிழ் கல்வி எதிர்நோக்கும் சவால்கள் பற்றிய கருத்தரங்கு

2 mins read
a41a21f2-9146-444c-a5bc-3d983c033c87
கருத்தரங்கில் பங்கேற்ற விருந்தினர்களில் சிலர். படம்: தேசிய கல்விக் கழகம் -

அண்­டை­நா­டான மலே­சி­யா­வில் தமிழ்க் கல்­வித் துறை எதிர்­நோக்­கும் சவால்­கள் பற்றி இங்­குள்ள நிபு­ணர்­களும் பயிற்சி ஆசி­ரி­யர்­களும் அண்­மை­யில் இன்­னும் ஆழ­மாக அறிந்­து­கொள்ள வாய்ப்பு கிடைத்­தது.

தேசி­யக் கல்­விக்­க­ழக ஆசிய மொழி­கள் மற்­றும் பண்­பா­டு­கள் துறை­யின் தமிழ்­மொழி, பண்­பாட்­டுத்­துறை ஜூன் 11ஆம் தேதி காலை நடத்­திய மெய்­நி­கர் நிகழ்வில் அது பற்றி பேசப்­பட்­டது.

'மலே­சி­யத் தமிழ்க்­கல்வி: சவால்­களும் தீர்­வு­களும்' என்ற தலைப்­பி­லான 'தமிழ்க் கருத்­த­ரங்­கச் சிறப்­புரை' நிகழ்­வில் சிங்­கப்­பூ­ரை­யும் வெளி­நா­டு­க­ளை­யும் சேர்ந்த தமிழ் ஆய்­வா­ளர்­கள், கல்­வி­யா­ளர்­கள், தமி­ழா­சி­ரி­யர்­கள், தமி­ழார்­வ­லர்­கள் உட்­பட சுமார் 150 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

தேசிய கல்­விக் கழ­கத் தமிழ் க­லைக் கல்­வி­யி­யல் வகுப்­பின் வரு­கை­தரு கல்­வி­யா­ள­ரா­கப் பங்­கேற்று வந்த மலே­சி­யா­வின் சைபர்­ஜெயா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சார்பு நிலைப் பேரா­சி­ரி­யர் என் எஸ். இரா­ஜேந்­தி­ரன், 'மலே­சி­யா­வில் தமிழ்க் கல்வி: சவால்­களும் தீர்­வு­களும்' எனும் தலைப்­பில் சிறப்­புரை ஆற்­றி­னார்.

மலே­சி­யத் தமிழ்க் கல்­வி­யின் பின்­னணி, வர­லாறு, அதன் தற்­கால நிலை, தமிழ்க் கல்வி எதிர்­நோக்­கும் சவால்­க­ள் மற்றும் தீர்வு அளிக்­கும் பரிந்­து­ரை­கள் ஆகியவற்றைப் பற்றி பேசினார்.

மலே­சி­யா­வில் மழ­லை­யர் பள்ளி முதல் பல்­க­லைக்­க­ழ­கம் வரை தமிழ்க் கல்வி கற்­பிக்­கப்­பட்டு வரு­கிறது. பல்­க­லைக்­க­ழ­கங்­களில் தமிழ்த்­து­றை­யு­டன், மொழி­யி­யல் துறை­யி­லும் தமிழ் ஆய்­வு­களும் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

எனி­னும் மலே­சி­யா­வில் தமிழ்க்­கல்வி இன்­றைய நிலை­யில் சரி­வைச் சந்­தித்து வரு­வ­தை­யும் பேரா­சி­ரி­யர் என் எஸ். இரா­ஜேந்­தி­ரன் குறிப்­பிட்­டார்.

தற்­போது அந்­நாட்­டில் 300க்கும் மேற்­பட்ட பள்­ளி­கள் அர­சாங்­கத்­தின் உத­வி­யு­டன் நடப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

பெண்­கள் அதி­க­மா­னோர் தமி­ழா­சி­ரி­யர்­க­ளா­கப் பணி­யாற்­று­கின்­ற­னர். மலே­சி­யா­வில் இளம் ஆசி­ரி­யர்­கள் மிகுதி என்­றார் அவர்.

தமிழ்க்­கல்­வி­யின் மேம்­பாட்­டுக்­கான பரிந்­து­ரை­களை முன்­வைத்த அவர், தமிழ்க்­கல்­வி­யும் தமிழ்ப்­பள்­ளி­கள் எதிர்­நோக்­கும் நீதி­மன்ற வழக்கு, குறை­வான குழந்­தைப்­ பிறப்பு விகி­தம், ஊட­கங்­களில் ஆங்­கி­லக்­க­லப்பு உட்­பட பல்­வேறு சவால்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டார்.

மலே­சி­யா­வின் பிர­த­மர் அலு­வ­ல­கத் துறை­யில், 2012ல் தமிழ்ப்­பள்­ளி­க­ளுக்­கான மேம்­பாட்­டுப் பிரிவு உரு­வாக்­கப்­பட்­டது.

முதல் முத­லா­கப் பிர­த­மர் துறை­யில் இடம் பெற்ற இந்­தப் பிரி­வு­வழி, தமிழ்க் கல்வி, தமிழ்ப்­பள்­ளி­க­ளின் மேம்­பாட்­டுக்­காக ஒரு விரி­வான ஆய்வு முயற்சி இடம்­பெற்­றதை பேரா­சி­ரி­யர் இரா­ஜேந்­தி­ரன் விளக்­கி­னார்.

நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ராக தேசி­யக் கல்­விக் கழ­கத்­தின் ஆசிய மொழி­கள், பண்­பா­டு­கள் துறை­யின் துணைத்­த­லை­வர், இணைப் பேரா­சி­ரி­ய­ரும் சீன எழுத்­தா­ள­ரு­மான திரு டான் சீ லே கலந்­து­கொண்­டார்.

தமிழ்­மொழி, பண்­பாட்­டுத் துறை­யில் அயல்­நாட்­டுப் பேரா­சி­ரி­யர்­கள் வரு­கை­தந்து கற்­பிப்­ப­தால் கிடைக்­கும் பயன்­கள், மாண­வர்­கள் பெறும் புதிய அறிவு, ஊக்­கம் ஆகி­யன குறித்து அவர் குறிப்­பிட்­டார். மேலும், தாய்­மொ­ழி­க­ளின் அவ­சி­யத்­தை­யும் அவை குறித்த பின்­ன­ணிச் செய்­தி­க­ளை­யும் வீட்டு மொழி­யா­க­வும் சமூக மொழி­யா­க­வும் தமிழ்­மொழி தொடர்ந்து மேம்­ப­டு­வது குறித்த கருத்­து­க­ளை­யும் சீன மொழிக்­கல்­வி­யு­டன் இணைத்­துப் பேரா­சி­ரி­யர் டான் பேசி­னார்.

செய்தி: முது­க­லைக் கல்­வி­யி­யல் மாண­வர்­கள், தமிழ்­மொழி, பண்­பாட்­டுத்­துறை, தேசி­யக் கல்­விக்­க­ழ­கம்