எச்ஐவி உள்ள நண்பரைக் கத்தியால் குத்தியவருக்கு சிறை, பிரம்படி, அபராதம்

1 mins read
4aec0288-4a72-4f0d-a267-9b6489bfc6d5
-

எச்­ஐவி பாதிப்­புள்ள 44 வயது ஆண் நண்­ப­ரு­டன் நெருக்­க­மா­கப் பழக மறுத்த 30 வயது ஆட­வர் ஒரு­வர், அந்த நண்­ப­ரைக் கத்­தி­யால் குத்­தி­னார். நேற்று அந்த ஆட­வருக்கு ஒன்­பது ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யு­டன் ஒன்­பது பிரம்­ப­டி­களும் $3,600 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டன.

கூட்­டு­ரிமை வீடு ஒன்­றில் இரு­வரும் மே 2018ல் வாட­கைக்­குத் தங்­கி­யி­ருந்­த­னர். அதே ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று இரு­வ­ருக்­கும் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது.

அதற்கு முந்­தைய இரவு ஆட­வர் வேறோர் ஆணுடன் வீடு திரும்­பி­ய­தா­கக் கூறப்­பட்­டது. நண்­பரின் எச்­ஐவி பாதிப்பு குறித்­தும் அவ­ரு­டன் நெருக்­க­மாக ஆட­வர் பழக மறுப்­பது குறித்­தும் இரண்டு பேரி­டையே சச்­ச­ரவு மூண்­டது.

ஆட­வர் நண்­ப­ரைக் கத்­தி­யால் குத்­தி­ய­தில் அவ­ரின் சிறுகுட­லில் காயம் ஏற்­பட்டு அதி­லி­ருந்து ஒரு சிறு பகு­தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்­டி­யி­ருந்­தது.