தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காட்டுப் பன்றி கருணைக்கொலை; ஈசூன் பூங்கா மீண்டும் திறப்பு

1 mins read
f101f407-d7bf-4d77-bfae-eee7c3851c20
-

ஈசூன் பூங்­கா­வில் மாது ஒரு­வ­ரைத் தாக்கி நினை­வி­ழக்­கச் செய்த காட்­டுப் பன்றி நேற்று முன்­தி­னம் பிடி­பட்­டு­விட்­ட­தாக தேசி­யப் பூங்­காக் கழக அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

அத­னை­ய­டுத்து ஈசூன் பூங்கா மீண்­டும் பொது­மக்­கள் பயன்­பாட்­டுக்­குத் திறந்­து­வி­டப்­பட்­டி­ருப்­ப­தாக, உள்­து­றைத் துணை­ய­மைச்­சர் முக­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம் ஃபேஸ்புக்­கில் நேற்று பதி­விட்­டார்.

பொது­மக்­கள் மீண்­டும் பூங்­கா­வுக்­குச் செல்­ல­மு­டி­வது குறித்து மகிழ்ச்சி தெரி­வித்த அவர், தேசி­யப் பூங்­காக் கழக அதி­கா­ரி­கள் தற்­கா­லி­கத் தடுப்­பு­களை அகற்­றி­வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

மார்ச் 9ஆம் தேதி மாலை ஆறே முக்­கால் மணி­ய­ள­வில், புளோக் 846 ஈசூன் ஸ்ட்­ரீட் 81இல் அந்­தக் காட்­டுப் பன்றி பெண் ஒரு­வ­ரைத் தாக்­கி­யது. பின்­னர் அது, ஈசூன் பூங்­கா­வில் உள்ள காட்­டுப் பகு­திக்­குள் மறைந்­து­விட்­டது. அத­னை­ய­டுத்து பூங்கா மூடப்­பட்­ட­து­டன், பொது­மக்­களை எச்­ச­ரிக்­கும் வகை­யில் ஆங்­காங்கே தடுப்­பு­கள் வைக்­கப்­பட்­டன.

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் புரிந்­து­ணர்­வுக்கு நன்றி தெரி­வித்த துணை­ய­மைச்­சர், காட்­டுப் பன்­றி­யைப் பிடிப்­ப­தற்கு அய­ராது உழைத்த தேசி­யப் பூங்­காக் கழ­கம், அந்த வட்­டார நகர மன்­றம் ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­க­ளுக்­கும் நன்றி கூறி­னார். பொது­மக்­க­ளின் பாது­காப்­பைக் கருதி காட்­டுப்­பன்றி கரு­ணைக்­கொலை செய்­யப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.