தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி சிங்கப்பூரிலிருந்து தப்ப முயன்ற ஆடவருக்குச் சிறை, பிரம்படி

2 mins read
26dd089b-b0fe-4672-908a-1414fc858745
-

சிறு­மி­யைப் பாலி­யல் ரீதி­யா­கத் தாக்­கிய குற்­றச்­சாட்டை எதிர்­கொண்ட ஆட­வர், வழக்கு விசா­ர­ணைக்­காக நீதி­மன்­றம் செல்­லா­மல் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து தப்­பிச் செல்ல முயன்­றார். சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து தம்­மைத் தப்­பிக்க வைக்­கக்­கூ­டிய ஒரு­வ­ரைத் தேடி அந்த ஆட­வர் புலாவ் உபின் தீவுக்­குச் சென்­றார். ஆனால் அங்­கி­ருந்து மலே­சி­யா­வுக்­குச் செல்ல தமக்கு உதவக்­கூ­டிய எவ­ரை­யும் அவ­ரால் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. எனவே, மீண்டும் சிங்­கப்­பூ­ருக்கு அவர் திரும்­பி­னார். மறு­நாள் பென்­கூ­லன் வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு ஹோட்­ட­லுக்கு அரு­கில் அவர் கைது செய்­யப்­பட்­டார்.

அந்த 22 வயது ஆட­வ­ருக்கு நேற்று ஒன்­பது ஆண்டு சிறைத் தண்­ட­னை­யும் ஆறு பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.

15 வயது சிறு­மி­யைப் பாலி­யல் ரீதி­யா­கத் தாக்­கி­யதை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

2017ஆம் ஆண்டு பாசிர் ரிஸ் ஸ்தி­ரீட் 51 உள்ள அடுக்­கு­மா­டிக் கட்­ட­டத்­தின் தரைத்­த­ளத்­தில் அச்­சி­று­மி­யைப் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­திய இரண்டு ஆட­வர்­களில் அவ­ரும் ஒரு­வர். பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் அடை­யா­ளத்­தைக் காக்க அந்த இரு ஆட­வர்­

க­ளின் பெயர்­களை வெளி­யி­டக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

2017ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் 17ஆம் தேதி அதி­காலை கட்­ட­டத்­தின் தரைத்­த­ளத்­தில் அச்­சி­றுமி குடி­போ­தை­யில் இருந்­தார். மற்ற நண்­பர்­கள் அங்­கி­ருந்து சென்­ற­தும் இந்த இரு ஆட­வர்­களும் அச்­சி­று­மியை சீர­ழித்­த­னர்.

சுற்­றுக்­கா­வ­லில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த காவல்­துறை அதி­கா­ரி­கள் அச்­சி­று­மி­யின் அழு­ குரலைக் கேட்டு அவரை அணு­கி­னர்.

நடந்­த­தைப் பற்றி அச்­சி­றுமி அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­வித்­ததை அடுத்து இரு ஆட­வர்­களும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

சிறு­மி­யைப் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­திய மற்றோர் ஆட­வ­ருக்கு எட்டு ஆண்­டு­கள், பத்து மாதங்­கள், 27 நாள்­கள் சிறை­யும் ஒன்­பது பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.