இல்லப் பணிப்பெண்களுக்கு முதியோர் பராமரிப்புச் சான்றிதழ்

2 mins read
f544582f-9ddd-4ff3-ab36-394eeadc8b35
இலங்கையைச் சேர்ந்த வர்னகுலசூர்ய மேரி கயானி ஃபெர்னாண்டோவும், 29 (வலம்), பிலிப்பீன்ஸ் நாட்டவரான ரோஸலின் கேரோ லேயேசும், 36, முதியோர் பராமரிப்பு துறையில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்பு சிங்­கப்­பூர் வந்த பிலிப்­பீன்ஸ் நாட்ட வரான திருவாட்டி லேயெஸ் ரோஸ­லின் கேரோ­வுக்கு முதி­யோர் பரா­ம­ரிப்­புத் துறை­யில் பணி­யாற்ற வேண்டும் என்பது ஆசை.

கொவிட்-19 சூழல் அவ­ருக்­குச் சாத­மாக அமைந்­தது. அத­னைப் பயன்­ப­டுத்­திக்கொண்ட அவர், முதி­யோர் பரா­ம­ரிப்­பில் பயிற்சி பெற்று சான்­றி­தழ் பெற்று உள்­ளார்.

வீட்­டில் உள்ள முதி­யோரைப் பரா­ம­ரிக்­கும் திட்­டத்­தில் பங்­கேற்று பயிற்சியை முடித்த 300 இல்­லப் பணிப்­பெண்­களில் 36 வயது லேயெ­சும் ஒரு­வர்.

ஃபாஸ்ட் என்று அழைக்­கப்­படும் சமூக ஆத­ரவு, பயிற்­சிக்­கான வெளி­நாட்டு இல்­லப் பணிப் பெண்­கள் சங்­கம் இந்­தப் பயிற்­சியை நடத்­தி­யது.

"முதி­யோரைப் பரா­ம­ரிப்­ப­தற்கு எப்­படி சான்­றி­தழ் பெறு­வது என்­பது ஆரம்­பத்­தில் தெரி­ய­வில்லை. ஆனால் இந்­தத் திட்­டத்­தில் சேர ஃபாஸ்ட் வழி­காட்­டி­யது," என்­றார் லேயெஸ்.

"சிக்­க­லான சூழ்­நி­லை­யில் மூத்த குடி­மக்­களை எப்­படி பரா­ம­ரிப்­பது என்­பதை அனு­ப­வ­முள்ள பயிற்­று­விப்­பா­ளர்­கள் எங்­க­ளுக்­குக் கற்­றுக்கொடுத்­த­னர். நான் மிக­வும் விரும்பி கற்­றுக்கொண்­டேன்," என்றார் அவர்.

திருவாட்டி லேயெஸ் சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­து­கொண்டு தனது சம்­ப­ளத்­தின் மூலம் பிலிப்­பின்­சில் உள்ள தனது பெற்­றோ­ருக்­கும் உடன்­பி­றந்­த­வர்­க­ளுக்­கும் ஆத­ர­வாக இருந்து வரு­கி­றார்.

ஃபாஸ்ட் நடத்­தி­வ­ரும் பயிற்சி வகுப்பை இன்று வரை 2,000க்கும் மேற்­பட்டவர்­கள் முடித்­துள்­ள­னர். அது, 2005ஆம் ஆண்டி­லி­ருந்து இல்­லப் பணிப்­பெண்­க­ளுக்கு முதி­யோர் பரா­ம­ரிப்­பில் பயிற்சி அளித்து வரு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் மூன்று ஆண்­டு­ க­ளுக்கு மேல் பணி­யாற்றி வரும் இலங்­கை­யைச் சேர்ந்த வர்­ன­கு­ல சூர்ய மேரி கயானி ஃபெர்னாண்­டோ­வும் இப்­ப­யிற்­சியை முடித்­துள்­ளார். கடந்த இரண்டு ஆண்­டு­ க­ளாக தமது முத­லா­ளி­யின் மூத்த குடும்ப உறுப்­பி­னர்­களை அவர் பரா­ம­ரித்து வரு­கி­றார். "நான் கற்றுக்கொண்ட திறன் எனக்கு மட்­டு­மல்­லா­மல் சமூ­கத்­திற்­கும் பய­னுள்­ள­தாக இருக்­கும்," என்று அவர் கூறி உள்­ளார்.

ஃபாஸ்ட், 2025ஆம் ஆண்டுக்குள் முதியோர் பரா மரிப்பில் 10,000 இல்லப் பணிப் ெபண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.