முதியவரை முகத்தில் குத்தியவருக்கு மூன்று வாரம் சிறை

1 mins read
9754636e-fcd1-4481-810e-eaba77cc2ab4
-

ஊன்­று­கோல் உத­வி­யு­டன் சாலை யைக் கடந்து கொண்­டி­ருந்த முதிய­வர் ஒரு­வரை, மோட்­டார்சைக்­கிளில் வந்த ஒரு­வர் கையால் குத்­தி­னார்.

முதியவர் தரையில் விழுந்து விட்டார். என்றாலும் அப்போது வந்துகொண்டி­ருந்த வாக­னத்­தில் அடி­படா­மல் நூலி­ழை­யில் அந்த முதி­யவர் தப்­பி­விட்­டார்.

வேலு பிள்ளை ராமன் குட்டி, 70, என்ற அந்த முதி­ய­வ­ருக்கு நீரிழிவு நோயும் உண்டு என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

முதி­ய­வரைத் தாக்­கிய முகம்­மது காசிம் புவாங், 58, என்­ப­வ­ருக்கு நேற்று மூன்று வாரம் சிறைத்­தண்டனை விதிக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வம், ஹவ்­காங் ஸ்திரீட் 92ல் உள்ள ரீஜென்ட் வேல் கூட்­டு­ரிமை புளோக் அருகே 2020 டிசம்­பர் 5ஆம் தேதி இரவு சுமார் 7.20 மணிக்கு நிகழ்ந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. வழக்கை விசா­ரித்த மாவட்ட நீதி­பதி திரு மார்­வின் பே, நல்ல வேளை­யாக அந்த முதி­ய­வர் வாக­னத்­தில் அடி­ப­டா­மல் தப்­பி­னார் என்று தீர்ப்­பில் கூறினார்.

சாலையை முதி­ய­வர் கடந்து கொண்­டி­ருந்­த­போது, முகம்­மது காசிம் வாக­னத்­தில் வேக­மாக வந்­த­தா­க­வும் முதி­ய­வர் மீது மோதா­மல் இருக்க முயன்­ற­தில் முகம்­மது தன் வாக­னத்தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­மல் கீழே விழுந்­து­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

எழுந்து முதி­ய­வ­ரி­டம் சென்ற முகம்­மது காசிம், முதி­ய­வ­ரின் இடது முகத்­தில் ஒரு குத்­து­விட்­டார். இத­னால் முதி­ய­வர் கீழே விழுந்­து­விட்­டார். அப்­போது எதிரே வாக­னங்­கள் வந்து கொண்­டி­ருந்­தன. நல்­ல­வே­ளை­யாக முதி­ய­வர் தப்­பி­னார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.